Monday, December 31, 2012

நாயகனாய் நின்ற நந்தகோப னுடைய

கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண

வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்!

ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை

மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்

தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்

வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மாநீ!

நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்!

No comments: