Thursday, August 8, 2013


அல்லிநாட் டாமரைமே லாரணங்கி னின்துணைவி
மல்லிநா டாண்ட மடமயில் - மெல்லியலாள்,
ஆயர் குலவேந்த னாகத்தாள், தென்புதுவை
வேயர் பயந்த விளக்கு.


வாரண மாயிரம் சூழ வலம்செய்து,
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.

நாளை வதுவை மணமென்று நாளிட்டு,
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான்,ஓர்
காளை புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்.

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம்,
வந்திருந் தென்னை மகட்பேசி மந்திரித்து,
மந்திரக் கோடி யுடுத்தி மணமாலை,
அந்தரி சூட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.

நாற்றிசைத் தீர்த்தங் கொணர்ந்து நனிநல்கி,
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்தேத்தி,
பூப்புனை கண்ணிப் புனிதனோ டென்றன்னை,
காப்புநாண் கட்டக் கனாக்கண்டேன் தோழீநான். 

கதிரொளி தீபம் கலசமு டனேந்தி,
சதிரிள மங்கையர் தாம்வந்தெதிர் கொள்ள,
மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு,எங்கும்
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான். 

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத,
முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான். 

வாய்நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்,
பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,
காய்சின மாகளிறன்னான் என் கைப்பற்றி,
தீவலம் செய்யக் கனாக்கண்டேன் தோழீநான்.

இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்,
நம்மை யுடையவன் நாராயணன் நம்பி,
செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி,
அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான். 

வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு
எரிமுகம் பாரித்தென்னை முன்னே நிறுத்தி,
அரிமுகன் அச்சுதன் கைம்மேலென் கைவைத்து,
பொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.

குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து,
மங்கல வீதி வலம்செய்து மணநீர்,
அங்கவனோடும் உடன் சென்றங் கானைமேல்,
மஞ்சன மாட்டக் கனாக்கண்டேன் தோழீநான். 

ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை,
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க்கோன் கோதைசொல்,
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,
வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே. 


Wednesday, June 19, 2013

Á¢Ģȧ¸ ! Á¢Ģȧ¸ !


மத்தியான வெயிலின் ÝðÊÄ¢ÕóÐ ¾ôÀ¢ì¸ ±ñ½¢ ஜன்னல் வழியே Å£ðÎìÌû ѨÆó¾ காற்று ஹால் சுவரில் அலங்காரமாக மாட்டியிருந்த மயில்பீலிகளை அசைத்தது. உள்ளேயிருந்து என் மனைவியின் குரல் கேட்டது.

"ஏன்னா ! லீவு போட்டுட்டு ¯ì¸¡óÐ இருக்கறப்பவே பாங்குக்கு போயிட்டு வந்துடுங்கோ. இன்னும் எவ்ளோ நேரம் அந்த புஸ்தகத்துலேயே மூழ்கி ¦¸¼ì¸È¾¡ ¯ò§¾ºõ ?"

அஞ்சாம் கிளாஸ் பாடத்தின் கேள்விக்கு பதில் கண்டுபிடிப்பது பட்டம் பெற்ற பிறகு இத்தனை கஷ்டமா ? நானும் தேடிக் கொண்டேதான் இருக்கிறேன். என் செல்போன் அடித்துக் கொண்டே இருந்தது. ஏதோ ஞாபகத்தில் கவனிக்கவே இல்லை. எடுத்துப் பார்த்தேன். திருச்சியில் இருந்து என் நண்பன் சூரி.

"ஹலோ சூரி. என்னடா விசேஷம் ? இந்த மத்தியான நேரத்துல கூப்பிடுற ?"

"எப்போதும் போல செல்போனை மறந்து வச்சுட்டு கிளம்பி இருப்பியோன்னு நெனச்சு ¨¼Ã켡 ஆபீசுக்கு ·§À¡ý செஞ்சேன். நீ லீவுன்னு சொன்னா. அதான் செல்லுக்கு செஞ்சேன். ±ýÉ Å¢§º„õ ? ஏன் உடனே அட்டெண்ட் செய்யவில்லை ? தூங்கிக்கிட்டு இருந்தாயா ?"

"இல்லேடா. சின்னவனுக்கு நாளைக்கு கடைசி பரீட்சை. அதான் நான் படிச்சுகிட்டு இருந்தேன்"

சூரி ஒரு நிமிடம் மௌனமாக இருந்தான்.

"என்னடா விஷயம் ? ஒண்ணும் பேசாம இருக்கே ?"

"அது.. வந்து.. ரங்கா.. உன் கிட்டே ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்"

"சொல்லு"

"சகுந்தலாவோட வீட்டையும் தோட்டத்தையும் வித்துட்டாங்க. அங்கே ஃப்ளாட் கட்டப் போறாங்களாம். அதனால வீட்டை இடிக்கப் போறாங்க"

"என்னடா சொல்றே?"

"ஆமாம் ரங்கா. நீ காவேரிக் கரையிலே கடைசி நாளைக் கழிக்க ஒரு வீடு வேணும்னு சொல்லிகிட்டு இருந்தியே. உங்காந்தான் கையை விட்டுப் போயிடுத்து. இதிலே சின்ன்ச் சின்ன அபார்ட்மெண்ட்ஸ் இருக்கும்னு சொல்றாங்க. நம்ம பட்ஜெட்டுக்குள் வரும். அதுவும் உன் சகுந்தலா வீடு. அதான் சொல்லலாம்னு நெனச்சேன்"

"சரிடா சூரி. நான் யோசிச்சு அப்புறம் பேசறேன்"

ஃபோனை வைத்த பிறகு அப்படியே சிலை போல நின்று கொண்டு இருந்தேன்.

"ஏன்னா இப்படி பிரமை புடிச்ச மாதிரி நிக்கறேள் ? என்ன ஆயிடுத்து?"

"ஒண்ணுமில்லே பூமா.. ஸ்ரீரங்கத்துல புது அபார்ட்மெண்ட் ஒண்ணு வரதாம் சூரி சொன்னான். உடனே போய்ப் பாத்தா முதல்ல புக் செஞ்சுக்கலாம் இல்லையா. அதான்"

"உடனே கிளம்பணும்னா இப்ப்வேவா? பாங்குக்குப் போயிட்டு வந்துடலாமோல்லியோ ? «ÐìÌ §¿ÃÁ¢Õ째¡øÄ¢§Â¡ ? "

"கடுப்படிக்காதே..இப்பவே ஒண்ணும் போகப்போறதில்ல. நாளைக்குப் கிளம்பிப் போய் பாத்துட்டு வந்துடறேன்

"ஏன் கோச்சுக்கறேள் ? பாங்கு வேலையை இன்னிக்கே முடிச்சாகணும்னு நேத்திக்கு நீங்கதானே சொன்னேள் ?" âÁ¡Å¢ý ÌÃÄ¢ø ´Õ ¾Ø¾ØôÒ ¦¾¡¢ó¾Ð. «Åû கையை அழுத்தியதில் அமைதியாÉ¡û

“þ§¾¡.. þôÀ§Å ¸¢ÇõÀ¢ð§¼ý”.

"சரி சரி.. ஜாக்ரதையா போயிட்டு வாங்கோ"

அடுத்த நாள் பஸ்ஸில் ஏறி திருச்சியில் சூரியின் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தேன்.

"என்னடா இன்னைக்கே வந்துட்டே ! இன்னும் அந்த வீட்டை இடிக்கக் கூட ஆரம்பிக்கலையே"

"நான் ஜஸ்ட் போயி அந்த இடத்தைப் பாத்துட்டு வரேன் சூரி"

"அங்கே யாருமே இருக்க மாட்டாளேடா. சகுந்தலா எங்கேயோ வெளிநாட்டுலே இருக்கறதா கேள்வி. அவ அப்பா போயி பல வருஷம் ஆச்சு. வீடுதான் அங்கங்கே இடிஞ்சு கிடக்கு. சரி சரி குளிச்சு சாப்பிட்டுவிட்டு போ"

"பரவாயில்ல.. சும்மா பாத்துட்டு வரேன். எனக்குத் தெரிஞ்ச இடம்தானே"

சூரி சிரித்தான். "ஆமாமா.. உனக்குத் தெரியாத இடமா?"

அதுதானே.. எனக்குத் தெரியாத இடமா ?

கிளம்பினேன். அம்மா மண்டபத்துக் காவிரியில் கரை ஓரமாக லேசாக ஓடிய தண்ணீரில் இரண்டு பேர் பெரிய பாத்திரங்களைக் கழுவிக் கொண்டு இருந்தார்கள். இந்த இடத்தில் மேலிருந்து தொபுக்கடீர் என்று தண்ணீரில் குதித்து நீந்திய காலம் நினைவுக்கு வந்தது. ஸ்ரீரங்கத்தின் முகம் மாறி இருந்தது. தாத்தாசாரியாரின் மாந்தோப்பு முழுவதும் மரத்துக்கு பதிலாக கட்டிடங்கள். திருவானைக்காவல் குளக்கரையில் இருந்த ஐயர் காபி ஹோட்டல் காணாமல் போயிருந்தது. அன்ன காமாட்சி கோயிலின் வாழைத் தோப்புக்கு மேலாக ஒரு புது பாலம் இருந்தது. வானை முட்டிக் கொண்டு நின்ற தெற்கு கோபுரத்தை நிமிர்ந்து பார்த்தபடி மேற்கு அடையவளைஞ்சானைக் கடந்து மேலூர் ரோட்டில் நடந்தேன். வயலும் வயல் சார்ந்த பகுதியாகவும் இருந்த இடங்கள் கான்கிரீட்டும் அது நிரம்பிய காடாகவும் மாறி இருந்தன. தெப்பக்குளத்தைச் சுற்றி அடுக்கு மாடி வீடுகள்.

அதோ தெரியுதே ..அதுதான்.. அங்கேதான் என் மார்புக்குள் ஏதோ ஒரு ஓட்டப்பந்தயம் நடந்தது. தோட்டமெல்லாம் மரங்களும் புதர்களுமாக அடர்ந்திருக்க நாயுடு பங்களா தெரிந்தது. ஒரு பெரிய பலகையில் குடியிருப்புக் கட்டிடங்கள் வரப்போகும் அறிவிப்பு இருக்க இரும்பு கேட் பூட்டப்படாமலே இருந்தது. நான் முன்னோக்கி நுழைய என் மனம் பின்னோக்கி ஓடி இருபது வருடங்களைக் கடந்தது.

திருச்சி சந்தானகோபால ஐயங்காரின் இருபது வயது ரங்கராஜன் என்கிற, கல்லூரியில் கடைசி வருடம் படிக்கும் எனக்கும் ஸ்ரீரங்கத்தின் விரல் விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களில் ஒருவரான ஸ்ரீராமுலு நாயுடுவின் மகளான 19 வயது சகுந்தலாவுக்கும் தெய்வீகக் காதல் இரண்டு வருடமாக அம்மா மண்டபத்திலும், கொள்ளிடம் வண்ணான் படித்துறையிலும், உச்சிப் பிள்ளையார் கோவில் படிக்கட்டிலுமாக வளர்ந்து கொண்டே இருந்தது. அவள் அப்பாவுக்கு விவரம் தெரிந்தால் என் உடம்பு ஓயாமாரி சுடுகாட்டில் புகை மண்டலத்தில் சாம்பலாக இருக்கும் என்பது தெரிந்தும் அவள் என்னைப் பார்த்து சிந்தும் புன்னகைக்காகவே பயந்து பயந்து அவளைக் காதலித்துக் கொண்டிருந்தேன். அந்த மஞ்சள் முகத்தின் பளபளப்பில் குளித்தலை வாழைப்பழம் கூட அவமானப்படுமே !

அன்று..

என் கல்லூரி வாழ்க்கையின் கடைசிப் பரீட்சையை எழுதி விட்டு சக்குவை மாம்பழச்சாலை அனுமார் கோவில் வாசலில் சந்தித்தேன்.

"ரங்கா.. பரீச்சை நல்லா எழுதினியா ?"

காவிரிப்ப்பாலத்தில் இருந்து வீசிய காற்றில் அவள் தாவணி இடுப்பில் இருந்து விலகி பறக்க தெருவில் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று தடுமாறி பின் சீறிப் பறந்தது.,

"நன்னா எழுதிருக்கேன். எல்லாம் பெருமாள் பாத்துப்பார். முதல்ல நீ தாவணியை ஒழுங்கா சொருகிக்கோ"

அவள் முறைத்தபடி "அது சரி. இப்போ அவசரமா எதுக்கு என்னைப் பாக்கணும்னு சொன்னே ?" என்றாள்.

"நாளைக்கு காலம்பர பம்பாய் கிளம்பறேன். உன் கிட்ட ஏற்கனவே சொல்லி இருந்தேனே ! மறந்து போயிட்டியா ?"

அவள் முகம் ஃப்யூஸ் போன பல்பாக மாறியது.

"என்ன சக்கு ? ஏன் டல்லா ஆயிட்டே? "

"போடா.. எனக்கு என்னமோ மாதிரி இருக்கு. நீ எப்போ திரும்பி வருவே?"

"அண்ணா ஆத்துக்கு போறேன். அங்கே வேலை கிடைக்கறதான்னு பாக்கணும். கிடைச்சதும் இங்கே திரும்பாம வேறே எங்கே போகப்போறேன் ? உன்னைக் கல்யாணம் செஞ்சுக்க எப்படியும் திரும்பி வரனுமில்ல"

அவள் காற்றில் பறந்த தாவணியைப் பிடித்துக் கொண்டு தூரத்தில் தெரிந்த மலைக்கோட்டையைப் பார்த்தாள்.

"நான் அதிக நேரம் இங்கே நின்னு பேசிகிட்டு இருக்க முடியாது. யாராவது பாத்தாலும் வம்பு பேசுவாங்க. நீ வீட்டுப் பக்கம் வந்தா தோட்டத்துல உக்காந்து பேசலாம் இப்போ வரியா ?"

நாங்கள் பழக ஆரம்பித்து வெகு நாட்களாகியும் எப்படி எங்கள் காதலை இன்னும் யாருக்கும் தெரியாமல் மறைத்தே வைத்திருக்கிறோம் எனும் ரகசியம் எங்களுக்கே பிடிபடவில்லை. . நான் ஒரு பயந்தாங்கொள்ளி என்பதாலும் சகுந்தலா வீட்டுக்கு அடங்கிய பெண் என்பதாலும் நாங்கள் எப்போதாவது பேசிக்கொண்டிருக்கும்போது யாராவது பார்த்தாலும் தப்பாக நினைப்பதில்லை. ஆனாலும் சக்குவின் அப்பாவுக்கு அவள் நடவடிக்கைகளில் எங்கோ சந்தேகப் புகை வாடை வந்திருப்பது எங்களுக்குப் புரிந்திருந்தது. அது என் மீதா என்பது எங்களுக்கே தெரியாது. ஆனாலும் எச்சரிக்கையாகவே இருந்தோம். சூரி போன்ற நண்பர்களுக்கு தெரிந்தாலும் அவர்கள் மூச்சு விடுவதில்லை.

பம்பாய் கிளம்பும் முன் சக்குவின் மஞ்சள் டாலடிக்கும் முகத்தை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று எனக்குள் ஆடிப்பெருக்கின் வெள்ளம் போல ஒரு ஆசை இருந்தது. அவள் கூப்பிட்டதும் உடனே அவளுடன் அவள் வீட்டு தோட்டத்துக்குப் போய்விட்டேன். மாலை நேரத்தில் யாருமில்லாத தோட்டத்தில் சுவர் ஓரத்து மாமரத்து நிழலில் இருவரும் உட்கார்ந்திருந்தோம். மஞ்சள் சூரியனின் வெளிச்சம் மாமரத்தின் மேல் விளக்கு போட்டது போல விழுந்து கொண்டிருந்தது.

அவள் வீட்டிலிருந்து எடுத்துக் கொண்டு வந்த முறுக்கு பொட்டலமும் தண்ணீர் பாட்டிலும் ஒரு சாக்லேட் பெட்டியும் அருகே இருந்தன.

"என்ன இருக்கு இதிலே ? சாக்லேட்டா ?"

"ஊஹூம். மயில் இறகு"

"எதுக்குடி அது?"

"அது புத்தகத்துலே வச்சா குட்டி போடுமாம். இது புது சாக்லெட் பெட்டி. இதுல வச்சா என்ன ஆகும்னு பாக்கறதுக்காக வச்சிருக்கேன்"

"நீ இன்னும் எலிமெண்டரி கிளாசிலே இருந்து வெளியே வரவே இல்லையா" தலையில் தட்டிக் கொண்டேன்.

அவள் என்னைப் பார்த்து சிரித்தாள்.

ஒரு கையில் அந்த மயிலிறகை எடுத்து ஸ்டைலாக அவள் கன்னத்தில் வருடினேன்.

"இப்படி தடவினதாலே இந்த மயிலிறகுக்கு ஒரு ஸ்பெஷல் அந்தஸ்து வந்துடுதது சக்கு... நோக்கு தெரியுமாடி.. விஞ்ஞானிகள் எல்லாம் காலப்பெட்டகம் அப்படின்னு புதைச்சு வைப்பாளாம். ரொம்ப முக்கியமான வஸ்து எதையவது அதுக்குள்ளே வச்சிருப்பாளாம். எல்லா காலத்துக்கும் அது ஒரு சாட்சி மாதிரி இருக்குமாம். நம்ம காதலுக்கும் ஒரு காலப்பெட்டகம் வேணுமின்னு நெனச்சுண்டேன்."

அவள் என்னைப் புரியாமல் பார்த்தாள்.. மரத்தின் மேல் தவிட்டுக் குருவிகள் கீச்கீச்சென்று கூவிக்கொண்டிருந்தன.

"இதுதான் நம்ம காதலுக்கு சாட்சி" என்றபடி அந்த மயிலிறகை சாக்லேட் பெட்டிக்குள் வைத்தேன்.

"இதை ஒரு காலப் பெட்டகம் போல வைக்கப் போகிறேன். என்னைக்கும் இது நம்ம காதலைச் சொல்லும்"

"என்ன செய்யப்போறே ரங்கா?"

நான் அந்த சுவரில் ஏறி பெரிய மாமரத்தில் படர்ந்திருந்த கொடியை விலக்கினேன். அதன் பின் ஒரு பொந்து இருப்பது தெரியும். அது ரொம்ப பாதுகாப்பானது. மழையோ பனியோ போகாது.

"இதோ இதுக்குள்ளே வைக்கிறேன். நம்ம கல்யாணம் முடிஞ்சு வந்து இதை எடுப்போம். அன்னைக்கு இதை எடுத்து இதே மாதிரி உன் கன்னத்துல இதாலே நான் தட்வுவேன்."

அவள் என்னையே பார்த்துக் கொண்டு இருந்தாள். நான் அவள் முகத்தையே பார்த்தேன். மஞ்சள் கன்னத்தில் இருட்டு பரவியது. நிர்மலமான வானத்தை மேகம் மூடியது.

"அப்படி ஒரு வேளை நாம பிரியற மாதிரி ஆயிட்டா என்னைக்காவது நான் வந்து இதை எடுத்துண்டு போயி நம்ம ஞாபகார்த்தமா என்கிட்டே வச்சுப்பேன்"

"அப்படி சொல்லாதே ரங்கா. நாம நிச்சயம் கல்யாணம் செஞ்சிக்குவோம்"

நான் இறங்குவதற்கு வசதியாக பிடித்துக் கொள்ள சகுந்தலா என்னைப் பார்த்து கையை நீட்டினாள்.

அப்போது எங்கிருந்தோ "ராஸ்கல். யாருடா அது ? " என்று ஒரு கர்ஜனை எழுந்தது.

சக்குவின் அப்பாவும் அவர் எடுபிடிகள் இரண்டு பேரும் தூரத்தில் வருவதைப் பார்த்ததும் அங்கே இருந்து சுவர் வழியாக வெளியே தாவிக் குதித்து ஓடி விட்டேன். தயிர் சாதத்தில் வளர்ந்த என் உடம்பு அவ்ர்களின் ஒரு அடியைக் கூட தாங்காது. அன்று ராத்திரி பயந்து போய் சூரி வீட்டில் தங்கினேன். அடுத்த நாள் பம்பாய் கிளம்பி விட்டேன். .அங்கே இருந்து பலமுறை முயற்சி செய்தும் யார் மூலமாகவும் எந்த விவரமும் தெரியவில்லை.

சில காலம் கழித்து விசாரித்தபோது சக்குவுடன் கூட இருந்தது யார் என்று அவள் தெரிவிக்காமல் இருந்து விட்டாள் எனபதும் ,சக்குவின் அப்பா அந்த விஷயம் வெளியே தெரிந்தால் அசிங்கம் என்று நினைத்து சக்குவை அவள் மாமனுக்கே கல்யாணம் செய்து கொடுத்து விட்டதாக சூரி உளவறிந்து சொன்னான். காலத்தின் ஓட்டத்தில் எனக்கும் கூட கல்யாணம் ஆனது. ஆனாலும் அந்த மயிலிறகு என் மனதை தடவிக் கொண்டே இருந்தது. இப்போது சகுந்தலாவின் வீடு இடிக்கப் படப்போகிறது என்று தெரிந்ததும் என் உடமையை எடுத்துக் கொள்ள வந்து விட்டேன். அவள் அப்பா இறந்து விட்டார் என்று தெரியும். எங்கோ வெளிநாட்டில் இருக்கும் சகுந்தலா இதை எல்லாம் மறந்து போய் வாழ்க்கையின் வேகத்தில் கலந்திருப்பாள். அந்த நாளும் அந்த மயிலிறகின் ஸ்பரிசமும் எனக்குள் இருப்பதைப் போல எல்லா காதலர்களுக்கும் இருக்குமா என்ன ?

இதோ என் சக்குவுடன் நான் அமர்ந்து இருந்த இடம்.

அங்கேயே நின்றபடி மாமரத்தையும் அதில் அடர்ந்து மூடிக் கிடந்த கொடியையும் பார்த்தேன். எல்லாமே இன்னும் அப்படியேதான் இருக்கு. இதோ நான் சாக்லேட் பெட்டியை வச்சதும் கீழேயிருந்து சக்கு கையை நீட்டியது நேற்று நடந்தது போலவே இருந்தது. என்ன ஆகியிருக்கும் ? மெல்ல உடைந்த ஓரச்சுவரில் நின்றபடி மரத்தில் படர்ந்திருந்த கொடியை நகர்த்தி பொந்துக்குள் பார்த்தேன். எத்தனை வருடங்கள் போய் விட்டன. இன்னும் அது அப்படியே இருக்குமா? கையை விட்டு தடவியபோது...

இருந்தது.

உள்ளே மங்கிய வெளிச்சத்தில் அது தெரிந்தது. அந்த சாக்லேட் பெட்டி.

"இந்த பங்களா உடைஞ்சு போயிடும். அதோட இந்த மரமும் கொடியும் அழிஞ்சு போயிடும். ஆனா என் முதல் காதலின் சாட்சியா இருந்த மயிலிறகு என்னுடன் இருக்க வேண்டும். சக்கு கிட்டே சொன்னது போல அதை என்னைக்கும் அழிய விட மாட்டேன். அவள் இப்போது எங்கே இருக்கிறாளோ.. என்ன நிலையோ.. ஆனால் நான் என் காதலின் சின்னத்தை என்னுடன் கொண்டு போகப் போகிறேன்"

மெதுவாக கையை நீட்டி அந்த சாக்லேட் பெட்டியை எடுத்தேன். கையெல்லாம் துரு ஒட்டிக் கொண்டிருந்தது. மெல்ல காலை ஊன்றி சமாளித்தபடி பெட்டியை லேசாக தட்டி விட்டு மூடியைத் திறந்து அதன் உள்ளே இருந்ததை எடுத்தேன்.

வண்ணங்கள் லேசாக மங்கி இருந்தபோதும் அங்கங்கே உதிர்ந்து இருந்தபோதும் லேசான தென்றலில் அந்த மயிலிறகு அசைந்து ஆடியது. கண்ணில் மெல்ல நீர்ப்படலம் திரை போட அதை பெட்டியில் வைத்துக் கொண்டு இறங்க வேண்டி பிடிப்புக்காக கையை கீழே நீட்டினேன்.

என் கையை இன்னொரு கை பிடித்தது.

குனிந்து பார்த்தேன்.

முன் நெற்றியில் நரையோடி இருக்க, காட்டன் புடவையில் தடித்த ஃப்ரேம் போட்ட மூக்குக் கண்ணாடிக்குள் ஈரமான கண்களுடன் ...

சகுந்தலா !


யானைகள் புல் மேய்வதில்லை


சில்லென்று இதமாக வீசிக் கொண்டிருந்த மலைக்காற்றில் ஒரு ஈர வாசனை தெரிந்தது. மழை வருமா ? ஆனாலும் அவன் அண்ணாந்து பார்த்தபோது வானம் நிர்மலமான நீல நிறமாகவே இருந்தது. அந்த நீல வானத்தில் இருந்து ஒரு சிறிய துண்டை வெட்டி எடுத்து வைத்தது போல அந்த சிறிய ஏரி அவன் எதிரில் தெரிந்தது. அதன் கரையில் இருந்த பாறையின் மீது அவன் வெகு நேரமாக உட்கார்ந்திருக்கிறான்.

அவன்...,,,,,,,பிரபு என்கிற பிரபாகர்.. 

முப்பது வயது இன்னும் முடியவில்லை.. இள வயதிலேயே இராணுவத்தில் சேர்ந்து சில போர்முனைகளையும் கண்டவன். பகைவர்களுக்கு பாரதத்தின் வீரம் என்னவென்று காட்டி அதன் பரிசாக ஒரு பாதத்தை இழந்தவன். கைபர் கணவாய் போல நெற்றியின் ஓரத்திலிருந்து கன்னத்தின் வழியாக காதுக்கு கீழ் வரை ஒரு பள்ளம்....முன்பல்லில் ஒன்றில் பாதி காணாமல் போனதால் பேசும்போது லேசாக காற்றுடன் சொற்கள் கலந்து வரும். ஆனாலும் அவன் கண்ணில் இன்னும் கதிரவன் ஒளி வீசியபடிதான் இருந்தான். நேர் கொண்ட பார்வையும் நிமிர்ந்த நடையும் அவன் ஆண்மைக்கு கட்டியம் சொல்லும். .

பணி செய்ய முடியாத நிலையில் இன்று இராணுவத்தில் இருந்து வெளியேறி விட்டான். வயிற்றுக்கு உணவும் உடல் மறைக்க உடையும் அவனுக்கு என்றும் கிடைத்துவிடும். ஆனால் வாழ்வின் வசந்தங்களை அவன் இதுவரை கண்டதிலை. என்றோ அனாதையானவன் இன்றோ குரூபியானவன். அதனால் அவன் வாழ்வில் துணை வர எந்தப் பெண்ணும் தயாராகவும் இல்லை. உடன் பணியாற்றியதால் அவன் வெள்ளை உள்ளத்தைப் புரிந்து கொண்ட நண்பன் துரைசாமி அவனைத் தன்னுடன் தன் வீட்டுக்கு அழைத்து வந்திருந்தான். 

"எவ்வளவு நாள் வேணுமானாலும் என்னோடு இரு. தனியா இருக்க்ணும்னு நென்சசு மனசை கஷ்டப்படுத்திக்க வேணாம். உனக்கு ஒரு வேலை கிடைப்பது பெரிய விஷயம் இல்லை. இப்போதைக்கு உன் பென்ஷன் இருக்குது. மத்ததை அப்புறம் யோசிக்கலாம்". துரையின் அன்பு அழுத்தமாக அவனைப் பிடித்துக் கொள்ள அவன் மனைவியின் பயம் கலந்த முகம் அவனை தர்மசங்கடத்தில் தள்ளியது.

"உங்க ஃப்ரெண்டு கிட்டே ஏதாச்சும் சொல்லி கொஞ்சம் அவர் ரூம் பக்கமே இருக்கும்படி செய்யுங்க. குழந்தை அவரு மொகத்தைப் பாத்தாலே பயப்படுது" அவள் கிசுகிசுத்தது ஒரு வேளை பிரபுவின் காதில் கேட்டாலும் கேட்கட்டுமே என்று கூட இருந்திருக்கலாம். 

இப்போது வந்திருக்கும் பிரச்சினையை அவன் துரையிடம் சொல்ல விரும்பவில்லை. இரண்டு நேர்முகத் தேர்வுகளில் அவன் தெரிந்தெடுக்கப் பட்டு இருந்தாலும் அதில் ஒரு நிறுவனம் மட்டுமே அவனை பணியில் சேருமாறு கடிதம் அனுப்பி இருந்தது. ஆனாலும் ஐம்பதாயிரம் ரூபாய் உடனடியாக செக்யூரிடடி டெபாசிட் ஆக கட்ட வேண்டிய நிலை. 

காரணமே இல்லாத காரணங்களால் அவன் இதுவரை சேமிக்க வேண்டும் என்று எண்ணியதில்லை. இன்றோ திடீரென்று அவசரமான தேவை உருவாகி இருக்கிறது. துரை ஏற்பாடு செய்து தருவான். ஆனால் அவன் மனைவியை எதிர்த்து பேச வேண்டி இருந்தால் அதை பிரபு விரும்பவில்லை. மேலும் இன்னும் துரை வீட்டில் அவனுக்கு பாரமாக இருக்கவும் பிரபுவால் முடியவில்லை. எப்படியாவது இந்த பணத்தை ஏற்பாடு செய்து விட்டால் சில மாதங்களில் திரும்பக் கொடுத்து விடலாம். ஆனால் யாரைக் கேட்பது ? வங்கிகளில் கூட சுலபத்தில் பணம் கிடைக்காதே ?

போர் முனையில் கூட இத்தனை மன அழுத்தம் இருந்ததில்லை. அவன் சுற்றுமுற்றும் பார்த்தான். கண்ணுகெட்டிய தொலைவு வரை மரங்களும், புதர்களும் மட்டுமே தெரிந்தன. மேல் வானத்தில் சூரியனை சில கருமேகங்கள் சுற்றி வளைத்து ராகிங் செய்து கொண்டிருக்க, அனுசரணை இல்லாத மனிதர்களாக மலை முகடுகள் அதை அசையாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றன.

காற்றில் லேசாக குளிர் அதிகரிக்க அவன் உடம்பு சிலிர்த்தது. கடிகாரத்தைப் பார்த்து விட்டு சால்வையைப் போர்த்தியபடியே எழுந்து விந்தி விந்தி நடந்தான். ஊனமான காலில் அணிந்திருந்த வட்டமான செருப்பு லேசாக வழுக்க காலை அழுத்தி ஊன்றியபடியே நிமிர்ந்தபோது பொட்டென்று ஒரு நீர்த்துளி அவன் நெற்றியில் விழுந்தது. இலவசப் பொருட்கள் தருவதாகக் கூறும் அறிவிப்பைப் பார்த்ததும் கூடும் மக்கள் போல அதற்குள்ளாக கருமேகங்கள் கூடி வானத்தில் சண்டையிட ஆரம்பித்து இருந்தன. கையில் குடை இல்லை. வீட்டிலிருந்து நிறைய தூரம் வந்து விட்டான் என்பது தெரிந்தது. மழை வலுக்கும் முன் ஒதுங்க ஒரு இடம் தேவை.

எங்கும் மரக்கூட்டங்கள்தான் தெரிந்தன.. ஊழித் தாண்டவமாடும் ருத்ரன் போல தலை விரித்து ஆட ஆரம்பித்த மரக்கூட்டங்களின் நடுவில் அந்த சிறிய வீடு தெரிந்தது. உள்ளே தெரிந்த விளக்கின் ஒளி இதமாக மனதில் ஒரு வெப்பத்தைக் கிளப்ப அவன் மெல்ல மெல்ல அந்த வீட்டை நோக்கி நடந்தான். பூமியை செழிப்பாக்க வருகிறோம் என்று மேகங்கள் விடும் செய்தியைத் தாங்கி வரும் தந்திக் கம்பிகளாக மழை ஆரம்பித்தபோது பிரபு அந்த வீட்டின் வாசல் கதவைத் தட்டினான்.

கதவு திறந்ததும் தெரிந்த அந்த முகம்...

ஒரே ஒரு மத்யம ஸ்வரத்தில் கல்யாணி ராகமும், சங்கராபரணமும் மொத்தமாக வித்தியாசப்படுவது போல சாதாரண பெண்களிடமிருந்து அவளிடம் ஏதோ ஒரு வேறுபாடு தெரிந்தது. அது என்ன என்று மனதுக்குப் புரியவில்லை. வயது என்ன என்பது சரியாக தெரியவில்லை. முப்பதுகளின் பின் பகுதியில் இருக்கலாம்.. ஆனால் மாலை மயங்கிய பிறகும் மேல் வானத்தில் பரவியிருக்கும் செவ்வண்ணம் போல ஒரு இளமையான் புன்முறுவல் தெரிந்தது.

நூல் புடவையில் இருந்தாலும், ஒரு அன்புச் சக்கரம் அவள் பின் சுற்றுவது போல தோன்றியது. கடவுள் உருவாக்கியதை இயற்கை யோசித்து யோசித்து வருடக் கணக்கில் செதுக்கி இப்படி தெய்வீகமாக ஆக்கி இருக்குமோ ? அவன் அவளையே பார்த்தபடி நின்றான்

"உள்ளே வாப்பா.. மழை வலுக்குது"

இது வரை அவனைக் கணடதும் முகம் சுளிக்காமல் வரவேற்றது இவள் மட்டும்தானோ ?

அவன் உள்ளே வந்தபோது "அங்க்கிள்" என்றபடி ஒரு சின்னப்பயல் .. இல்லை.. சின்னப்புயல் அவன் மீது பாய "டேய் சீனா.. அங்க்கிளை தொந்தரவு செய்யாதே" என்றபடி சீனாவை நகர்த்தி விட்டு "நீ உட்காருப்பா" என்றாள். ஒரே ஒரு சிறிய அறை. அதை ஒட்டியபடி இருந்த இன்னொரு அறை சமையலறை எனவும், ஓரமாகத் தெரிந்த கதவு டாய்லெட் என்றும் புரிந்தது.

தன் மேல் ஏறிய சீனாவைப் பிடித்துக் கொண்டபடி "பரவாயில்லைங்க சின்னப் பையன்தானே ! " என்ற அவனுக்குள் துரையின் மகனுடைய பயந்த முகம் தோன்றி மறைந்தது.

"என் பேரு பிரபாகர். நான் கோல்டன் எஸ்டேட் குவாட்டர்ஸில் என் நண்பனோடு தங்கி இருக்கேன். இங்கே இந்த ஏரிக்கு வாக்கிங் வந்தேன்.திடீர்னு மழை வந்திருச்சு. அதான்.. இங்கே... மழை விட்டதும் கிளம்பிடுறேன்"

"அதனாலே என்னப்பா ? இங்கே யாரும் வர்ரதில்லை. சரியான பாதையும் இல்லை. இப்போ போனாலும் மழைத் தண்ணி சேறாக்கி சறுக்கி விட்டுரும்." என்றவள் அவன் காலைக் கவனித்து "கண்ணி வெடியா?" என்றாள்.

"ஆமா..எப்படி சரியா...... ?"

அவள் கையை நீட்டிய திசையில் பார்த்தபோது மிலிடரி உடை அணிந்த ஒருவரின் படத்துக்கு சந்தன மாலை அணிவிக்கப்பட்டு இருந்தது.

"என் வீட்டுக்காரர். எப்பவும் நாடு நாடுன்னே பேசிக்கிட்டு இருப்பார். மிலிடரிக்காரங்க எல்லாரும் யானை போலன்னு சொல்லுவார். எப்பவும் உயர்ந்த லட்சியத்தோடதான் வாழணும். யானை எப்பவுமே ஒசந்த மரக்கிளையை ஒடிச்சு திங்குமே தவிர தரையில் இருக்குற புல்லைத் தின்னாது. அது போலத்தான் நாமளும் வாழணும்னு சொல்லுவாரு. நாங்க அவ÷ §Àò தட்டுனதே இல்லை.  ¿¡Î¾¡ý அவருக்கு உசிரு. நாட்டுக்கு உழைக்கிறவங்களுக்கு என்ன வேணுமானலும் செய்யலாம்னு சொல்லுவாரு"

சீனா அவன் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டான். பிரபுவின் மனதில் அணை உடைந்து ஒரு நதி ஓட ஆரம்பித்தது. அவளுடன் பேசிக்கொண்டே போனபோது தனக்கும் கூடப்பிறந்தவர்கள் இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று அவனுக்குள் ஒரு மின்னல் தோன்றி மறைந்தது. நேரம் நகர நகர வெளியே மழைத்தாரைகள் இருளுடன் கூடி திரை போட்டு உலகத்தை மூடியிருந்தன. பேச்சு வாக்கில் பிரபு அவனையும் அறியாமல் அவ்னைப் பற்றிய விவரங்களைச் சொல்ல அவள் முகத்தில் ஒரு பனி மூட்டம். 

"எப்படிப்பா இத்தனை கஷ்டங்களையும் தாங்கிக்கிட்டு இருக்கே ? எங்க வீட்டுக்காரர் சொன்னது போல நீங்க எல்லாருமே யானைங்கதான். எங்களைப் பாரு..எங்களுக்கும் வேறு சொந்தம் யாரும் இல்லை. ஆனா எனக்கு சீனாவும் அவனுக்கு நானுமாய் இருக்கிறோம். ¯ÉìÌ Â¡Õ§Á þø¨Ä§Â" 

" ¿£í¸ ±ôÀÊஇந்த இடத்தில் தனியா...?"

அவள் சிரித்தாள். 

"இயற்கைக்கு எதிராகத்தான் போராட முடியாது. மனிதர்கள் கிட்டே இருந்து என்னைக் காப்பாத்திக் கொள்ள எனக்கு சக்தி இருக்குதுப்பா"

மழை விடுவதாகத் தெரியவில்லை.

"இன்னைக்கு ராத்திரி இங்கேயே தங்கிட்டு காலையில் மழை விட்டதும் கிளம்பலாமே" 

பேய் மழையால் நகர முடியாமல் போக பிரபு துரைக்கு ஃபோன் செய்து விவரம் சொன்னான். காலையில் மழை விட்டதும் வருவதாக் சொன்னான். அன்று இரவு அவள் கொடுத்த அவள் கணவரின் லுங்கியைக் கட்டிக்கொண்டு சூடான சப்பாத்தியை சாப்பிட்டு விட்டு உட்கார்ந்திருந்தபோது அவள் அவனுக்கு எதிரில் வந்து உட்கார்ந்து கொண்டாள். சீனா கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு அவன் மடியில் சாய்ந்தபடி தூங்கிப் போயிருந்தான்.

"உன் கிட்டே நல்லா ஒட்டிக்கிட்டான் போலிருக்கு"

"ஆமாம்"

"அவனுக்கு அன்பு காட்ட என்னை விட்டால் யாரு இருக்காங்க.. அதான் பள்ளம் கண்டதும் பாயுற தண்ணி போல பாயுறான்" அவள் ஜன்னல் இடுக்கு வழியாகத் தெரிந்த மின்னலைப் பார்த்தபடி சொன்னாள்.

"பிரபாகரை ஒரு விஷயம் கேக்கலாமா?"

"கேளுங்க"

"உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேணாமா ? எங்காவது ஒருத்தி உனக்காக பிறந்திருப்பா இல்லையா?"

பிரபு மெல்லச் சிரித்தபடி "இந்த முகத்தைப் பாருங்க.. இதில் இருக்கும் தழும்புகளை விட அதிகமாக வலிக்கும் தழும்புகள் என் மனதில் இருக்கு. அத்தனை அவமானங்கள்... "

"உனக்குன்னு ஒரு குடும்பம் வேணாமா ?"

"குடும்பமா... ? அது மனப்பூர்வமாக யாராவது என்னோடு வாழ்ந்தால் நல்லா இருக்கும். ஆனா என் வாழ்க்கையில் அது கிடைக்க சான்ஸே இல்லை"

அவள் அவனை பரிவாக ஏறிட்டாள். "உனக்கு ஆசையே கிடையாதா?"

"நீங்க சொல்லுறது புரியுது. எனக்கு எல்லா ஆசைகளும் இருக்கு.. குடும்பம், குழ்ந்தைங்க... எல்லாமே.... ஆனா அதுக்காக வெறுமே ஒருத்தியோட என்னைப் பகிர்ந்துக்கா நான் தயாராக இல்லை. எனக்குள் இருக்கும் ஆசைகள் என்னோடு முடிஞ்சு போனாலும் பரவாயில்லை. என்னை வெறுக்கும் ஒருத்தியோட வெறும் பொய் வேஷம் போட்டு வாழ என்னால் முடியாது. என் வாழ்க்கையில் எது கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. இப்போதைக்கு எனக்கு ஒரு வேலை கிடைச்சா போதும். என் நண்பனுக்கு பாரமா இருக்க விரும்பலை. அவன் என்னை பாரமா நினைக்கல. ஆனாலும்..... "

அவள் எதுவும் பேசவில்லை.

அந்த சிறிய அறையில் ஒரு ஓரமாக சீனாவைப் படுக்க வைத்து விட்டு அவனுக்கு ஒரு பஞ்சடைத்த மெத்தையை விரித்தாள். ஜன்னலில் இருந்து வழிந்த நீர் ஓரமாக கசிந்திருக்க அவள் படுக்கையை அறையின் நடுவில் போட்டள்.

"இப்படி போட்டா உங்களுக்கு படுக்க இடம் போதாதே. நான் இப்படியே ஓரமா சுருண்டு படுத்துக்குறேன் அக்கா"

அக்கா என்ற வார்த்தை கேட்டு அவள் ஒரு நிமிடம் அப்படியே நின்றாள்.

"பரவாயில்லை. நான் அந்த சமையலறையில் படுத்துக்குவேன்"

இரவு விளக்கின் ஒளியில் தூங்கிக் கொண்டு இருந்த சீனாவின் முகத்தை பார்த்துக் கொண்டே இருந்தான். பின் மழையின் ஒலியைக் கேட்டபடி மல்லாந்து படுத்துக் கண் மூடியிருந்தான். எவ்வளவு நேரம் போனது என்று தெரியவில்லை. காலையில் கண்விழித்தபோது அவள் சூடான டீயுடன் தயாராக இருக்க சீனா கீழே விழுந்திருந்த மரக்கிளைகளில் இருந்த பூமொட்டுக்களைப் பறித்துக் கொண்டு இருந்தான். 

"வெளியே நிக்காதே சீனா... மரமெல்லாம் சாய்ஞ்சிருக்குது பாரு" அவள் சீனாவை அழைத்தாள்.

"நல்ல தூக்கமா ? " என்றபடி அவள் சிரித்தாள்.

அப்போது துரையிடமிருந்து அழைப்பு வர அவன் கிளம்பினான்.

"போய்விட்டு அப்புறமாக இன்னொரு நாள் வரேன்". 

அவன் காலைக் கட்டிக் கொண்டு பிடிவாதம் பிடித்த சீனாவை அவள் விலக்கி விட போக மனமின்றி காலைத் தேய்த்தபடி அவன் நகர்ந்தான்.

"ஒரு நிமிஷம் பிரபாகர் !" 

அவள் அவன் கைகளில் ஒரு சின்ன பையைத் தந்தாள். மேலாக ஒரு பிளாஸ்டிக் ¸ÅÕìÌû முறுக்கு தெரிந்தது.

"அப்புறமா சாப்பிடு"

அவன் தடை சொல்லாமல் வாங்கிக் கொண்டு நடந்தான். வானம் இன்னும் மூட்டமாகவே இருந்தது. அவன் துரையின் வீட்டுக்கு வந்தபோது மீண்டும் ஒரு பெருமழை பிடித்தது. காற்றோடு மழையும் சேர்ந்து வெறி பிடித்தது போல ஆடி முடித்தபோது அவன் மனதில் மட்டும் வானம் நிர்மலமாகவே இருந்தது.

மத்தியானம் தன் அறையில் இருந்தபோது அவள் தந்த பை ஓரமாக இருந்தது. அதை எடுத்து திறந்தான். மேலாக ஒரு கவரில் நாலு முறுக்குகள் இருந்தன. அதன் கீழ் இன்னொரு கவர் இருந்தது. அதை எடுத்துப் பிரித்தான். கட்டு கட்டாக் ரூபாய் நோட்டுகள். மொத்தம் ஐம்பதாயிரம். அத்துடன் ஒரு சிறிய பேப்பர்.

:"தம்பி பிரபாகர்.. எந்த காரணத்துக்காகவும் ஒரு ராணுவ வீரன் கஷ்டப்படக் கூடாதுன்னு எங்க வீட்டுக்காரர் சொல்லுவார். உன் கஷ்டத்துக்கு இப்போதைக்கு இது உதவும். நீ தானம் வாங்குவதாக நினைத்து மனம் வருந்த வேண்டாம். கடனாகவே நினைத்துக் கொள். உன்னால் என்றைக்கு திருப்பித் தர முடியுமோ அன்று தந்தால் போதும். நீ என்னை அக்கா என்று உண்மையாக நினைத்து அழைத்திருந்தால் இதை வைத்துக் கொள்"

அவன் அப்படியே சிலை போல நின்று கொண்டிருந்தபோது ..

"பிரபு..உனக்கு கூரியர் வந்திருக்கு".

கூரியரில் வந்த கவரைப் பிரித்தபோது ஏற்கனவே நேர்முகத்தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த இன்னொரு பெரிய கம்பெனியின் சென்னைக் கிளையில் அவனை உடனே வந்து சேரும்படி செய்தி வந்தது. தங்கும் இடமும் அவர்க்ளே தருவதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை விட முக்கியமாக அவன் எந்தத் தொகையும் டெபாசிட்டாக செலுத்த வேண்டியது இல்லை என்பதும் புரிந்து போனது. அவன் எதிர்பார்த்திருந்த உத்தியோகம். இனி கவலை இல்லாத வாழ்க்கைக்கு ஒரு கேரண்டி.

"கங்கிராஜுலேஷன்ஸ் பிரபு" என்று துரை துள்ளி வந்து அவனை அணைத்துக் கொண்டான். "இனிமேல் உனக்கு ஒரு குறையும் இல்லை"

"உன்னைப் போல ஒரு நண்பன் இருக்கும்போது எனக்கு என்ன குறை? ஒரு சின்ன விஷயம். நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன் துரை" மனம் முழுவதும் பிரகாசமாக அவன் கிளம்பினான்.

அவன் அந்த வீடு இருந்த அந்த மரக்கூட்டத்துக்கு அருகே வந்தபோது ஒரு வேறுபாடு தெரிந்தது. காற்றில் அங்கங்கே மரங்கள் விழுந்து கிடக்க மனிதக்கூட்டமும் இருந்தது. வீடு இருந்த இடத்தில் ஒரு பெரிய மரத்தின் கிளைகள் சரிந்து கிடப்பது தெரிந்தது. அவன் விந்தி விந்தி அருகில் ஓடினான்.

"என்ன ஆச்சு?"

"நேத்து ராத்திரி மழையிலேயே அந்த மரமெல்லாம் சாய ஆரம்பிச்சிருந்துச்சு. காலையிலே மறுபடி அடிச்ச காத்துல அந்த மரம் அந்த மிலிடரிக்காரன் வீட்டு மேலே விழுந்திருச்சு. வாசலில் இருந்த அவரு சம்சாரம் அடிபட்டு விழுந்துட்டாங்க. ஆஸ்பத்திரியிலே சேர்த்து இருக்காங்க அந்தப் சின்னப் பையன் மட்டும் உள்ளே இருந்திருக்கான். அதனால தப்பிச்சுட்டான். அவங்களுக்கு உறவுக்காரங்க வேற யாரும் இல்லை., பாவம் அந்த புள்ளை நிலைமை"

பிரபு வேகமாக முன்னேறினான். சிதறிக் கிடந்த கிளைகளுக்கும், இலைகளுக்கும் நடுவில் ஒரு சின்ன உருவம். «Åý Óý§ÉÈ ஒரு போலீஸ் முகம் அவனை மறித்தது.

"யாரு நீங்க ?"

அவன் வாய் திறக்கும் முன் "அங்கிள்" என்ற விம்மலுடன் சீனா அவனிடம் ஓடி வர அவனைக் கைகளில் ஏந்திக் கொண்டான்.

"அழக்கூடாது சீனா... அங்க்கிள் இருக்கேனில்ல"

"ஓஹோ.. நீங்க இவங்க சொந்தக்காரங்களா ? சரி.. சரி.. கொஞ்சம் இப்படி வாங்க"

பிரபு சீனாவைத் தூக்கிக் கொண்டு அவர் பின்னே போனான். 

அதன் பிறகு மிஷன் ஆஸ்பத்திரியில்....................

"அந்த லேடி கோமாவுல இருக்காங்க. எப்போ சரியாகும்னு சொல்ல முடியாது. பட்டணத்துக்குக் கொண்டு போய் பெரிய ஹாஸ்பிடலில் பார்க்கலாம். குணமாக சான்ஸ் இருக்கு.. அப்புறம்....இப்போதைக்கு அவங்க பையனை ஒப்படைக்கக் கூடிய இடம் நீங்கதான். அவனை வச்சுக்க உங்களுக்கு ஆட்சேபணை இருந்தா ஏதாச்சும் இல்லத்துல சேர்த்து விடுறோம்..."

"இல்லே இல்லே.. அவன் என் கிட்டேயே இருக்கட்டும். என் அக்காவையும் சென்னைக்கு அழைச்சுகிட்டு போக ஏற்பாடு செஞ்சிடறேன்."

மருத்துவமனைக் கட்டிலில் அவள்அசையாமல் படுத்திருந்தாள். கடவுள் உருவாக்கி இயற்கை யோசித்து யோசித்து வருடக்கணக்கில் செய்த தெய்வீக சிற்பம் அல்லவா ? 

நேற்று அவள் என்ன நினைத்து முன் பின் தெரியாத தனக்கு அத்தனை பணத்தைக் கொடுத்தாள் என்று அவளைக் கேட்க ஆசைப்பட்டான். ஆனால் அவன் கேள்விக்கு பதில் கிடைக்கும் என்று தோன்றவில்லை. அது அவனுக்குள்ளேயே மெதுவாகப் புதைய ஆரம்பித்தது. இந்தக் கேள்விக்கான பதில் எனும் புல் அவனுக்கு தேவையில்லை. அவன் வாழ்க்கையின் லட்சியம் இதுவல்ல.

அவள் சொன்னது நினைவுக்கு வந்தது. நம் செயலும் சிந்தனையும் என்றும் உயர்வாகவே இருக்க வேண்டும். போரிலும் சரி.. வாழ்விலும் சரி.. ஒரு ராணுவ வீரன் எதற்கும் கலங்காமல் முன்னேற வேண்டும். 

பிரபுவின் முகமும் மனமும் இப்பொது தெளிவாக இருந்தன. மருத்துவமனையில் இருந்து அவன் சீனாவின் கையைப் பிடித்துக் கொண்டு கிளம்பியபோது அவன் நடையில் தடுமாற்றம் இல்லை. ஏனென்றால்........

யானைகள் புல் மேயவதில்லை.

Sunday, January 13, 2013


வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை

திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி

அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்

பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன

சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே

இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரைத்தோள்

செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்


சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன்

பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்

பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து

நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது

இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா

எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு

உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்

மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்

Saturday, January 12, 2013


கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்

அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்

பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்

குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன் தன்னோடு

உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்

சிறு பேரழைத்தனவும் சீறி யருளாதே

இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.

Friday, January 11, 2013


கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உன் தன்னைப்

பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்

நாடு புகழும் பரிசினால் நன்றாகச்

சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே

பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்

ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு

மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்

 கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய.




Thursday, January 10, 2013

மாலே. மணிவண்ணா. மார்கழி நீராடுவான்

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்

ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன

பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே

போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே

சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே

கோல விளக்கே கொடியே விதானமே

ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்

Wednesday, January 9, 2013

ஒருத்தி மகனாய்ப் பிறந்து  ஓர் இரவில் 

ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத் 

தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த

கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்

நெருப்பென்ன நின்ற நெடுமாலே., உன்னை-

அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

Tuesday, January 8, 2013


அன்று இவ் வுலகம் அளந்தாய் அடி போற்றி

சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி

பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி

கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி

குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி

வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி

என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்

இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்

Monday, January 7, 2013

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து

வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்

போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன்-

கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய-

சீரிய சிங்காசனத்து இருந்து  யாம் வந்த-

காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்

Sunday, January 6, 2013

அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான

பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே

சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்

கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல

செங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ?

திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்

அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்

எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

Saturday, January 5, 2013

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப

மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்

ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுராய்!

ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில்

தோற்றமாய் நின்ற சுடரே! துயிலேழாய்

மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்

ஆற்றாது வந்துன் அடிபணியுமா போலே

போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்!

Friday, January 4, 2013


முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்!

செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு

வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்!

செப்பென்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்

நப்பின்னை நங்காய் திருவே துயிலேழாய்!

உக்கமுந் தட்டொளியும் தந்துன் மணாளனை

இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்!

Thursday, January 3, 2013

குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி

கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல்

வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்

மைத்தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை

எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்

எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்

தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்!

Wednesday, January 2, 2013

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்

நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்!

கந்தங் கமழும் குழலீ! கடை திறவாய்!

வந்தெங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்

பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்

பந்தார் விரலியுன் மைத்துனன் பேர்பாடச்

செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப

வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!

Tuesday, January 1, 2013

அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்

எம்பெருமான்! நந்த கோபாலா! எழுந்திராய்!

கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!

எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்! 

அம்பர மூடறுத் தோங்கி யுலகளந்த

உம்பர்கோ மானே! உறங்கா தெழுந்திராய்!

செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!

உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்!