மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் ! போதுமினோ நேரிழையீர் !
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள் !
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான் !
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் !!
நீராடப் போதுவீர் ! போதுமினோ நேரிழையீர் !
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள் !
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான் !
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் !!
No comments:
Post a Comment