Sunday, December 16, 2012

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்

 நீராடப் போதுவீர் ! போதுமினோ நேரிழையீர் !

 சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள் !

 கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

 ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்

 கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்

 நாராயணனே நமக்கே பறை தருவான் !

 பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் !!

No comments: