Saturday, December 22, 2012

கீசு கீசென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து

பேசின பேச்சரவம் கேட்டிலையோ ! பேயப் பெண்ணே !

காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து

வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ !

நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி

கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ !

தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய் !

No comments: