Tuesday, January 1, 2013

அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்

எம்பெருமான்! நந்த கோபாலா! எழுந்திராய்!

கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!

எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்! 

அம்பர மூடறுத் தோங்கி யுலகளந்த

உம்பர்கோ மானே! உறங்கா தெழுந்திராய்!

செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!

உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்!

No comments: