Thursday, March 6, 2025

ஒரு கவிதையின் பயணம் - 1

 ஒரு கவிதையின் பயணம் 

அடுப்பில் குக்கரை வைத்து விட்டு சங்கர் ஹாலுக்குப் போய் CD ப்ளேயரை ஓட விட்டான். சிட்டிபாபுவின் சிவலீலாதார்ணவம் மெதுவாக தடவிச் செல்லும் நீரோடை போல மிதந்து வந்தது. 

"இன்னைக்கு வெறும் துகையல் மட்டும்தான்..already டைம் ஆயிடுச்சு" என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு சமையல் அறையில் இருந்த ஜன்னலைத் திறந்தான்.

முதல் மாடியில் வீட்டின் பின்புறத்தை நோக்கி அந்த ஜன்னல் திறக்க அங்கிருந்த விரிந்த புல்வெளிகளில் நடை பழகிக் கொண்டிருந்த மாலை நேரக் காற்று மெதுவாக உள்ளே நுழைந்து கொஞ்சம் ஆச்சரியத்துடன் பார்த்தது. ஒரு தனிக்கட்டை இருக்கும் வீடு போலவா இருக்கிறது என்று வியப்புடன் சமையல் அறையை நோட்டம் விட்டு விட்டு முன் அறைக்குள் நுழைந்தது. 

அந்த சுத்தமான சிறிய ஹாலில் ஒரு மூலையில் இருந்த மேஜை மீது சில புத்தகங்களும், அலமாரியில் இருந்த பிள்ளையார் படத்துக்கு முன் முத்துப் போல சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்த தீபமும், ஓரமாக இருந்த சிறிய பீரோவின் அருகில் அழகாக மடித்து வைக்கப்பட்டிருந்த படுக்கையும் சங்கரின் இயல்பை சொல்லாமலேயே நமக்குத் தெரியப்படுத்தும். 

வாசல் கதவு "டக் டக்" என்று லேசாக தட்டப்படும் சத்தம் கேட்டு "ஹாய் ப்ரின்சஸ்... இதோ வரேன்...." என்றபடி வேட்டியை மடித்துக் கொண்டு வேகமாக போய்க் கதவைத் திறக்கவும்... 

"மாமா... "என்றபடி ஒரு குட்டிப் புயல் அவன் மீது பாயவும் சரியாக இருந்தது. 

"என்னடா கவிதாக்குட்டி.. இன்னைக்கு ஜோரா டிரஸ் செஞ்சுக்கிட்டு இருக்காளே" என்று கொஞ்சியபடி அந்த நாலு வயது குழந்தையைத் தூக்கிக் கொண்டு உள்ளே நகர, பின்னாலேயே "ஏய்.. கவிதா.. மாமா இப்பத்தான் ஆபீஸ்ல இருந்து வந்திருக்கார். அதுக்குள்ளே தொந்தரவு செய்யக் கூடாது" என்றபடி மாடிப்படியில் ஏறி வந்த உமா உள்ளே நுழைந்தாள். 

"என்ன அக்கா.. எனக்கு என்ன தொந்தரவு ? அதுவும் இல்லாம இந்த வீட்டு இளவரசியைத் தடுக்க எந்த ராஜா ராணிக்கும் உரிமை இல்லை. தெரியுமா?" என்று சிரித்தபடி சங்கர் சொன்னதைக் கேட்டு "அதிகமா செல்லம் கொடுக்கக் கூடாது அப்படின்னு கவிதா அப்பா சொன்னது உங்களுக்கும் சேர்த்துதான்" என்றாள் உமா. 

"அப்படின்னா முதலில் அவரை சரியா இருக்கச் சொல்லுங்க.. அவர் எனக்கு அதிகமா செல்லம் கொடுத்து இப்படி வச்சிருக்கறதால இப்ப என்னை அதட்டவே அவருக்கு ரைட்ஸ் இல்லாம போச்சு" 

கீழேயிருந்து "உமா.." என்று பலவீனமாக ஒரு குரல் கேட்டது. வாசல் அழைப்பு மணியின் ஓசையும் கேட்கவே "அடடா.. அவர் வந்துவிட்டார். அப்பா வேற கூப்பிடுகிறார். கவிதா.. வாடா கண்ணு.. அப்புறமா வந்து மாமா கூட விளையாடலாம்" என்று உமா கூப்பிட " நான் மாமா கூட சமத்தா இருக்கேன். நீ போய் அப்பாவுக்கு கரகர காப்பி கொடு" என்று கவிதா கொஞ்சியது. 

"என்னது கரகர காப்பியா ? " என்று சங்கர் கேட்க "அது வேற ஒண்ணுமில்லை. அவர் ஹிந்திலே கரம் கரம் அப்படின்னு சொல்லுவதை இவள் இப்படி கிண்டல் பண்றா" 

"சரி.. சரி.. கவிதா இங்கேயே இருக்கட்டும். நீங்க போய் வேலையைக் கவனிங்க. நான் அப்புறமா கொண்டு வந்து விடுகிறேன்" 

உமா படியிறங்கிப் போக கவிதா சமையல் அறையை நோக்கி விரலை நீட்டினாள். 

"என்னடா குட்டி.. மம்மு வேணுமா?' 

"அய்யோ மாமா.. மம்முன்னு சொல்லக் கூடாது. சாதம்னு சொல்லணும். நீங்க என்னை விட குட்டி பாப்பா மாதிரி பேசறீங்க" 

சங்கர் சிரித்தபடி கவிதாவைத் தூக்கிக் கொண்டு சமையல் அறைக்குள் நுழைந்தான். 

குக்கரில் வெயிட்டை போட்டுவிட்டு பார்த்தபோது கவிதாவின் கண்கள் ஜன்னலுக்கு வெளியே தொடுவானத்தை நோக்கி விரிந்திருந்தன. 

"மாமா.. இந்த புல்வெளிக்கு எல்லாம் பின்னாடி என்ன இருக்கு ?" 

சங்கரின் நினைவுகள் வேகமாக பின்னோக்கி பாய ஆரம்பித்தன. இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த கிராமமும் இல்லாத டவுனும் இல்லாத ஊரின் வங்கிக் கிளைக்கு மாற்றல் கிடைத்து அவன் வந்தபோது சரியான தங்கும் இடமும் சாப்பாடும் இல்லாமல் சில நாள் அவதிப்பட்டு உடம்பு சரியில்லாமல் போனபோது அந்த ஊரின் பெயர் ஓரளவு பிரபலமாக காரணமாக இருந்த ஒரு டாக்டரின் கிளினிக்கில்தான் மூர்த்தியை சந்தித்தான். 

மூர்த்தி பக்கத்து டவுனில் ஒரு ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் விற்கும் கடை வைத்திருந்தான். அவன் சொந்த ஊர் என்பதால் இங்கேயே தங்கிக் கொண்டு போய் வந்து கொண்டிருந்தான். ஓரளவு நிம்மதியான வாழ்க்கை. அவனுடைய அப்பாவுக்கு மட்டும் ரத்தத்தில் ஏதோ கோளாறு என்பதால் நல்ல டாக்டர் இருக்கும் இடத்தை விட்டு நகர அவனுக்கும் மனமில்லை. 

அவன் மனைவி உமா வீட்டையும், மாமனாரையும், அப்போது இரண்டு வயது குழந்தையான உமாவையும் தனியாக பார்த்துக் கொண்டு கொஞ்சம் சிரமப்பட்டுக் கொண்டுதான் இருந்தாள். 

மூர்த்தியையும், உமாவையும் பார்த்தபோது அவர்களுக்கு இவ்வளவு சிறிய குழந்தை இருக்கக் கூடும் என்று சங்கருக்குத் தோன்றவில்லை. மூர்த்தி நாற்பதின் பின்பாதியிலும், உமா முன்பாதியிலும் இருந்தார்கள். தாமதாமாகப் பிறந்த குழந்தை என்பதால் கவிதாவுக்கு கொஞ்சம் செல்லம் அதிகம்தான். 

சங்கரின் அமைதியான தோற்றமும், பேச்சும் அவர்களுக்குப் பிடித்துப் போக அவர்கள் வீட்டின் மாடியில் பூட்டிக் கிடந்த இரு அறைகளையும் அவனுக்கு வாடகைக்குக் கொடுத்தார்கள். ஊரிலிருந்த வந்து சங்கரின் அம்மா ஒரு வாரம் அவனுக்கு வேண்டியவற்றைச் செய்து கொடுத்து விட்டு "உனக்கு அக்கா மாதிரி இந்த பொண்ணு கிடைச்சிருக்கு. எனக்கு ஒரு பாரம் விட்டது. அங்கே உன் அண்ணாவும் அண்ணியும் வேலைக்குப் போய்க்கிட்டு குழந்தைகளோட தனியா கஷ்டப் பட்டுகிட்டு இருப்பாங்க. நான் கிளம்பறேன்" என்று சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டாள். 

குடி வந்த அன்றைக்கு மாடிக்கு வந்த கவிதாகுட்டி சிரித்துக் கொண்டே சங்கரின் மீது தாவியது. அன்று தொடங்கிய இந்த பந்தம்... இதோ தினமும் அவன் ஆபீஸ் விட்டு வந்ததும் அவள் வந்துவிட ராத்திரி தூங்கப் போகும் வரை அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டே திரியும் குழந்தை... 

இந்த தினசரி நடைமுறையில் கொஞ்ச காலமாக ஒரு புதிய வழக்கம் உருவாகி இருந்தது. 

சங்கரின் சமையலறை ஜன்னலுக்கு வெளியே கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை பசேல் என்ற புல்வெளிகள். 

தூரத்தில் அது வானமுகட்டைத் தொடும் விளிம்பில் தெரியும் தென்னை, பனை மர வரிசைகள்.. 

மாலை நேரத்தில் தங்கத் தகடாய் ஜொலிக்கும் சூரியன் மெள்ள மெள்ள கீழிறங்க.. பட்டுப் பாவாடை கட்டிக் கொண்டு 

கல்யாணத்துக்கு கிளம்பும் குட்டி தேவதைகள் போல பளபளவென மின்னிக் கொண்டு நகரும் மேகங்கள்... 

கவிதாவும் சங்கரும் தங்களை மறந்து தினமும் அதைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். 

ஒவ்வொரு நாளும் கவிதாவிடம் இருந்து வரும் ஒரே கேள்வி இதுதான்.. 

"மாமா.. இந்த புல்வெளிக்கு எல்லாம் பின்னாடி என்ன இருக்கு ?

(தொடரும்)

"சதுரகிரி மலையோரம் 

சாஞ்சிருக்கும் திருகுக் கள்ளி 

திருகுக் கள்ளிப் பாலெடுக்க 

திரிஞ்சேனடி சில காலம்" 

கிராமத்தின் குரல்தான் எத்தனை இனிமையானது. ஜன்னலின் வழியே நுழைந்து இதயத்தை வருடிக் கொண்டு போன இசையை ரசித்தபடி சங்கர் மிக்ஸியில் துருவிய கேரட்டைப் போட்டு அரைக்க ஆரம்பித்தான். 

"மாமா.. இந்த புல்வெளிக்கு எல்லாம் பின்னாடி என்ன இருக்கு ?" 

கவிதாவின் இந்தக் கேள்வி மட்டும் தினமும் மாறாமல் இருந்தது. ஆனால் இதற்கான பதில்கள் மட்டும் ஒவ்வொரு நாளும் 

சங்கரின் கற்பனையில் புதிது புதிதாக உதயமாகிக் கொண்டே இருந்தன. 

"ஏய் கவிதாக் குட்டி.. இந்த பெரிய்ய்ய்ய புல்வெளிக்கு பின்னாலே ஒரு பெரிய மலை இருக்கு. அந்த மலை உச்சியிலே முன்னாடி ஒரு ராஜா இருந்தார். அவரோட அரண்மனை ப்ளம் கேக்குல செஞ்சது. அதுல வாசல் கதவு எல்லாம் வேபர் பிஸ்கட். ஒவ்வொரு ரூமிலும் சுவர் எல்லாம் அழகழகா ஜெம்ஸ் பதிச்சிருப்பாங்க. 

தோட்டத்து மரத்துல எல்லா பப்பர்மிண்ட்டும் காய்ச்சு தொங்கும். வேர்க்கடலை மாதிரி செடியோட வேர்ல எல்லாம் சாக்லேட் கிடைக்கும். 

அங்கே இருக்கற ஒவ்வொரு பௌண்டன்லேயும் கோலா, ஸ்குவாஷ், கிரஷ் எல்லாம் வரும்" 

"மாமா.. ஆரஞ்சு கிரச்ஷ்ஷ¤.. எனக்கு ரொம்ம்பப் புடிக்கும்" 

"ஆமாமா.. ஆரஞ்சு கிரஷ் தனியா ஒரு குழாயிலே எப்பவும் வந்துகிட்டே இருக்கும்" 

கவிதாவின் கண்களில் கனவு குடியேற ஜன்னலுக்கு வெளியே தெரிந்த பரந்த புல்வெளியைப் பார்த்த வண்ணம் 

"மாமா.. எனக்கு தருவாங்களா?" 

"அட என் ராஜாக்குட்டி... அந்த ராஜா அப்பவே இந்த அரண்மனை கவிதாக் குட்டிக்கும் மட்டும்தான் அப்படின்னு 

சொல்லிட்டாராம். அதனாலே ஜில் ஜில் ஆரஞ்ச் ஜூஸ்.... பூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்" 

என்றபடி சங்கர் சாத்துக்குடியைப் பிழிந்து சர்க்கரை அதிகம் போடாமல் வடிகட்டி கொஞ்சமாக எடுத்து ஸ்பூனால் கவிதாவின் 

வாய்க்குள் கொடுத்தான். 

"மாமா.. ஒரு நாள் அங்கே போய்ப் பார்க்கணும்" 

"போகலாம் செல்லம். இப்போ சமத்தா அம்மா கொடுக்கற பப்பு மம்மு சாப்பிடணும். இன்னைக்கு மாமா லேட்டா வந்துட்டேன். 

அதனாலே பப்பு இல்ல.. இந்த தொகையல்.. ஊஊஊஊ... ரொம்ப காரம்.. கவிதாவுக்கு ஒறைக்கும்" 

"அய்யோ மாமா.. சேப்பு காரட் ஒறைக்காது. திதிச்சும்" 

" இதோ பாரு மொளகா... உர்ர்ர்ர்..." 

கவிதா இறங்கி ஓட.. சங்கர் ஒரு மிளகாயைத் துப்பாக்கி போல பிடித்துக் கொண்டு அவள் பின்னால் ஓடினான். 

"என்ன இந்தியா பாகிஸ்தான் சண்டையா ?" என்றபடி மூர்த்தி உள்ளே நுழைந்தார். 

"அப்பா.. மாமா காரட் ஒறைக்கும்னு தப்பு தப்பா சொல்றார்" என்று கவிதா முதல் குற்றச்சாட்டை தாக்கல் செய்தாள். 

"என்னது.. 14 காரட்டா.. 22 காரட்டா" என்று சிரித்தபடி அவளைத் தூக்கிக் கொண்ட மூர்த்தி "கீழே அம்மா கூப்பிடறா.. பாரு" என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே வந்த உமா "வாடி இங்கே.. "என்று அவளை வாங்கிக் கொண்டு கீழே இறங்கினாள். 

"இன்னைக்கு வயலுக்குப் பின்னாலே என்ன என்ன எல்லாம் இருந்துச்சு ? " என்று மூர்த்தி சிரிக்க.. 

"இன்னைக்கு பெரிய அரண்மனைக்கு நம்ம கவிதா சொந்தக்காரி ஆயிட்டா" என்று சங்கர் பதிலுக்கு சிரித்தான். 

"ம்ம்.. இவளுக்கு தினம் ஒரு கதை சொல்லி சொல்லி நீ பெரிய எழுத்தாளன் ஆயிடப் போறே" 

"உக்காருங்க பாவா" என்று சங்கர் சொல்ல மூர்த்தி "இல்லேப்பா.. டாக்டர் சொன்ன மருந்து ஒண்ணு இங்கேயும் கிடைக்கல. என் கடை பக்கத்திலும் இல்லை. அதுதான் நம்ம ராகவன் நேத்து பட்டணம் போனபோது சொல்லியிருந்தேன். வாங்கிட்டு வந்திருப்பாரு." என்றார். கீழே தாத்தா இருமும் சத்தம் கேட்டது. 

மாட்டு வண்டி போன கிராமத்து மண்பாதையின் சக்கரத் தடங்கள் போல சங்கரின் நெற்றியில் சுருக்கங்கள் தோன்றின. 

"பாவா.. டாக்டர் என்ன சொல்றாரு ?" 

"கவலைப் பட வேண்டாம் அப்படின்னுதான் சொல்றாரு. ஆனா என்னவோ மனக்குள்ளே புரியாத பயம் தோணுது.. சங்கர்" 

"பயப்படாதீங்க பாவா.. கடவுள் இருக்காரு. ஒண்ணும் ஆகாது" 

"சரிப்பா.. நான் கிளம்பறேன். நீ சாப்பிடு" 

அன்று இரவு சமையல் அறையின் ஜன்னல் அருகில் நின்றபடி நட்சத்திர வெளிச்சத்தில் இளங்காற்று தலைதடவிக் கொண்டிருந்த புல்வெளியைப் பார்த்தபடி சங்கர் நின்று கொண்டிருந்தான். இருட்டில் வெகு தூரத்தில் தெரிந்த மரவரிசைகளும், வெளிர் சாம்பல் நிறத்தில் திருநீறு பூசிக்கொண்டிருந்த வானமும், கண்ணுக்குப் புலப்படாத கடவுள் போல மறைந்திருக்கும் இரவுப் பூச்சிகளின் ரீங்காரமும், எங்கிருந்தோ மெதுவாக ஒலித்துக் கொண்டிருந்த பேர் தெரியாத பறவையின் சோக கீதமும் அவனைப் பாதிக்கவில்லை. அவன் மனம் அவன் வசம் இல்லை. 

ஒரு மெல்லிய குளிர் அவனைத் தொட்டுக்கொண்டு போனது. சங்கரின் உடல் சிலிர்த்தது. 

அவன் ஜன்னலை மூடினான். 

( பயணம் இன்னும் தொடரும்)

Sunday, July 31, 2016

படம் : வடைமாலை
குரல்கள் : சீர்காழி கோவிந்தராஜன், விஜயரமணி
இசை : எம்.எஸ்.விஸ்வ நாதன்




வடை மாலை தினம் சூடும் பெருமானே

Saturday, November 14, 2015

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம்




1. ஸுக்லாம் பரதரம் விஷ்ணும் ஸஸிவர்ணம் சதுர் புஜம்
ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே

2. யஸ்ய த்விரத வக்த்ராத்யா : பாரிஷத்யா : பரஸ்ஸதம்
விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக்ஸேநம் தமாஸ்ரயே

3. வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் ஸக்தே :பௌத்ர மகல்மஷம்
பராஸராத்மஜம் வந்தே சுக தாதம் தபோ நிதிம்

4. வ்யாஸாய விஷ்ணு ரூபாய வ்யாஸ ரூபாய விஷ்ணுவே
நமோ வை ப்ரஹ்ம நிதயே வாஸிஷ்டாய நமோ நம:

5. அவிகாராய ஸுத்தாய நித்யாய பரமாத்மநே
ஸதைக ரூபரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே

6. யஸ்ய ஸ்மரண மாத்ரேண ஜன்ம ஸம்ஸார பந்தநாத்
விமுச்யதே நமஸ் தஸ்மை விஷ்ணுவே ப்ரப விஷ்ணவே


ஓம் நமோ விஷ்ணவே ப்ரப விஷ்ணவே

ஸ்ரீ வைஸம்பாயந உவாச...


1. ஸ்ருத்வா தர்மா நஸேஷேண பாவநாநி ச ஸர்வஸ:
யுதிஷ்டிர : ஸாந்த நவம் புநரே வாப்ய பாஷத

யுதிஷ்டிர உவாச...


2. கிமேகம் தைவதம் லோகே கிம் வாப்யேகம் பராயணம்
ஸ்துவந்த : கம் கமர்ச்சந்த : ப்ராப்நுயுர் வாநவஸ ஸுபம்

3. கோ தர்ம: ஸர்வ தர்மாணாம் பவத: பரமோ மத:
கிம் ஜபந் முச்யதே ஐந்துர் ஐந்ம ஸம்ஸார பந்தநாத்

ஸ்ரீ பீஷ்ம உவாச -

4. ஜகத் ப்ரபும் தேவ தேவம் அநந்தம் புருஷாத்தமம்
ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண புருஷ: ஸததோத்தித:

5. தமேவ சார்ச்சயந் நித்யம் பக்த்யா புருஷ மவ்யயம்
த்யாயந் ஸ்துவந்ந மஸ்யம்ஸ் யஜமா நஸ் தமேவ ச

6. அநாதி நிதநம் விஷ்ணும் ஸர்வ லோக மஹேஸ்வரம்
லோகாத்யக்ஷம் ஸ்துவந் நித்யம் ஸர்வ துக்காதிகோ பவேத்

7. ப்ரஹ்மண்யம் ஸர்வ தர்மஜ்ஞம் லோகாநாம் கீர்த்தி வர்த்த நம்
லோக நாதம் மஹத்பூதம் ஸர்வபூத பவோத்பவம்

8. ஏஷ மே ஸர்வ தர்மாணாம் தர்மோ திகதமோ மத:
யத் பக்த்யா  புண்டரீகாக்ஷம் ஸ்தவை ரர்ச்சைந் நர: ஸதா

9. பரமம் யோ மஹத்தேஜ: பரமம் யோ மஹத்தப:
பரமம் யோ மஹத்ப்ரஹ்ம பரமம் ய: பராயணம்

10. பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களாநாம் ச மங்களம்
தைவதம் தேவதாநாம் ச பூதாநாம் யோவ்யய: பிதா

11. யத: ஸர்வாணி பூதாநி பவந்த்யாதி யுகாகமே
யஸ்மிம்ஸ்ச ப்ரளயம் யாந்தி புநரேவ் யுக க்ஷயே

12. தஸ்ய லோக ப்ரதா நஸ்ய ஜகந் நாதஸ்ய பூபதே
விஷ்ணோர் நாம ஸஹஸ்ரம் மே ஸ்ருணு பாப பயாபஹம்

13. யாநி நாமாநி கௌணாநி விக்யாதாநி மஹாத்மந:
ரிஷிபி: பரிகீதாநி தாநி வக்ஷ்யாமி பூதயே

ரிஷிர் நாம் ஸஹஸ்ரஸ்ய வேத வ்யாஸோ மஹாந் ரிஷி:
சந்தோ அநுஷ்டுப் ததா தேவோ பகவாந் தேவகீ ஸுத:

அம்ருதாம் ஸுத்பவோ பீஜம் ஸக்திர் தேவகி நந்தந:
த்ரிஸாமா ஹ்ருதயம் தஸ்ய ஸாந்த்யர்த்தே விநி யுஜ்யதே

விஷ்ணும் ஜிஷ்ணும் மஹாவிஷ்ணும் ப்ரபவிஷ்ணும் மஹேஸ்வரம்
அநேக ரூப தைத்யாந்தம் நமாமி புருஷாத்தமம்

அஸ்ய ஸ்ரீ விஷ்ணோர் திவ்ய ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய
ஸ்ரீ வேத வ்யாஸோ பகவாந் ரிஷி: அநுஷ்டுப் சந்த:
ஸ்ரீ மஹாவிஷ்ணு: பரமாத்மா ஸ்ரீமந் நாராயணோ தேவதா

அம்ருதாம் ஸுத்பவோ பாநுரிதி பீஜம்;
தேவகீ நந்தந: ஸ்ரேஷ்டேதி ஸக்தி;;
உத்பவ; க்ஷபணோ தேவ இதி பரமோ மந்த்ர;;
சங்க ப்ருந் நந்த்கீ சக்ரீ தி கீலகம்;
சார்ங்க தந்வா கதாதர இத்யஸ்த்ரம்
ரதாங்க பாணி ரக்ஷப்ய இதி நேத்ரம்;
த்ரிஸாமா ஸாமக: ஸாமேதி கவசம்;;
ஆநந்தம் பர ப்ரஹ்மேதி யோநி;;
ருது: சு தர்ஸந: கால இதி திக்பந்த;;
ஸ்ரீ விஸ்வரூப இதி த்யாநம்;
ஸ்ரீமஹாவிஷ்ணு ப்ரீத்யர்தே ஸ்ரீ ஸஹஸ்ரநாம ஜபே விநியோக;

த்யாநம்

1. க்ஷீரோ தந்வ ப்ரதேஸே ஸுசிமணி விலஸத் ஸைகதே மௌக்தி காநாம்
மாலா க்லுப்தா ஸநஸ்த : ஸ்படிக மணிநிபைர் மௌக்திகைர் மண்டிதாங்க:
கப்ரை ரப்ரை ரதப்ரை ருபரி விரசிதைர் முக்த பீயூஷ வர்ஷை:
ஆநந்தீ ந : புநீயா தரிநளிந கதா ஸங்க பாணிர் முகுந்த :

2. பூ : பாதௌ யஸ்ய நாபிர் வியத சுரநிலஸ் சந்த்ர ஸுர்யௌச நேத்ரே
கர்ணா வாஸா : ஸிரோ த்யௌர் முகமபி தஹநோ யஸ்ய வாஸ்தேய மப்தி:
அந்தஸ்தம் யஸ்ய விஸ்வம் ஸுர நர ககோ போகி கந்தர்வ தைத்யை:
சித்ரம் ரம்ரம் யதே தம் த்ரிபுவந வபுஷம் விஷ்ணு மீஸம் நமாமி

3. ஸாந்தா காரம் புஜக ஸயநம் பத்மநாபம் சுரேஸம்
விஸ்வாதாரம் ககந ஸத்ருஸம் மேக வர்ணம் சுபாங்கம்
லக்ஷ்மீ காந்தம் கமல நயநம் யோகி ஹ்ருத் த்யாந கம்யம்
வந்தே விஷ்ணும் பவபய ஹரம் ஸர்வ லோகைக நாதம்

4. மேக ஸ்யாமம் பீத கௌஸேய வாஸம்
ஸ்ரீவத்ஸாங்கம் கௌஸ்துபோத் பாஸிதாங்கம்
புண்யோபேதம் புண்டரீ காய தாக்ஷம்
விஷ்ணும் வந்தே ஸர்வ லோகைக நாதம்

5. ஸசங்க சக்ரம் ஸகிரீட குண்டலம்
ஸபீத வஸ்த்ரம் ஸரஸீரு ஹேக்ஷணம்
ஸஹார வக்ஷஸ் ஸ்தல ஷிபி கௌஸ்துபம்
நமாமி விஷ்ணும் ஸிரஸா சதுர்புஜம்

சாயாயாம் பாரி ஜாதஸ்ய ஹேம ஸிம்ஹாஸநோ பரி
ஆஸீந மம்புதஸ் யாமம், ஆயதாக்ஷ மலங்க்ருதம்

சந்த்ராநநம் சதுர்பாஹும் ஸ்ரீவத்ஸாங்கித வக்ஷஸம்
ருக்மிணீ ஸத்ய பாமாப்யாம் ஸஹிதம் க்ருஷ்ண மாஸ்ரயே

ஸஹஸ்ர நாம ப்ராரம்ப :

1. ஓம் விஸ்வம் விஷ்ணுர் வஷட்காரோ பூதபவ்ய பவத்ப்ரபு:
பூத க்ருத்பூத ப்ருத் பாவோ பூதாத்மா பூதபாவந:

2. பூதாத்மா பரமாத்மா ச முக்தாநாம் பரமா கதி :
அவ்யய : புருஷஸ் ஸாக்ஷீ க்ஷத்ரஜ்ஞோ அக்ஷர ஏவ ச

3. யோகோ யோகவிதாம் நேதா ப்ரதாந புருஷேஸ்வர:
நாரஸிம்ஹ வபுஸ் ஸ்ரீ மாந் கேஸவ : புருக்ஷத்தம:

4. ஸர்வஸ் ஸர்வஸ் சிவஸ் தாணுர் பூதாதிர் நிதி ரவ்யய:
ஸம்பவோ பாவநோ பர்த்தா ப்ரபவ: ப்ரபுரீஸ்வர:

5. ஸ்வயம்பூஸ் ஸம்பு ராதித்ய : புஷ்கராக்ஷ மஹாஸ்வந :
அநாதி நிதநோ தாதா விதாதா தாது ருத்தம:

6. அப்ரமேயோ ஹ்ருஷீகேஸ : பத்மநாபோ அமரப்ரபு :
விஸ்வகர்மா மநுஸ் த்வஷ்டா ஸ்தவிஷ்டஸ் ஸ்தவிரோ த்ருவ :

7. அக்ராஹ்யஸ் ஸாஸ்வத: க்ருஷ்ணோ லோஹிதாக்ஷ : பிப்ரதர்தந:
ப்ரபூதஸ் த்ரிககுப்தாம பவித்ரம் மங்களம் பரம்

8. ஈஸாந : ப்ராணத : ப்ராணோ ஜ்யேஷ்ட ஸ்ரேஷ்ட : ப்ரஜாபதி :
ஹிரண்ய கர்ப்போ பூகர்ப்போ மாதவோ மதுஸுதந :

9. ஈஸ்வரோ விக்ரமீ தந்வீ மேதாவீ விக்ரம : க்ரம :
அநுத்தமோ துராதர்ஷ : க்ருதஞ : க்ருதி ராத்மவாந்

10. சுரேஸஸ் ஸரணம் ஸர்ம விஸ்வரேதா : ப்ரஜாபவ :
அஹஸ் ஸம்வத்ஸரோ வ்யாள: ப்ரத்யயஸ் ஸர்வ தர்ஸன:

11. அஜஸ் ஸர்வேஸ்வரஸ் ஸித்தஸ் ஸித்திஸ் ஸர்வாதி ரச்யுத :
வ்ருஷா கபிரமேயாத்மா ஸர்வ யோக விநிஸ்ருத :

12. வஸுர் வஸுமநாஸ் ஸத்யஸ் ஸமாத்மா ஸம்மிதஸ் ஸம :
அமோக : புண்டரீகாக்ஷ வ்ருஷகர்மா வ்ருஷா க்ருதி :

13. ருத்ரோ பஹுஸிரா பப்ருர் விஸ்வ யோநிஸ் சுசிஸ்ரவா :
அம்ருத்ஸ் ஸாஸ்வதஸ் ஸ்தாணுர் வரா ரோஹோ மஹாதபா :

14. ஸர்வகஸ் ஸர்வவித் பாநுர் விஷ்வக்ஸேநோ ஜநார்தந:
வேதோ வேத விதவ்யங்கோ வேதாங்கோ வேதவித் கவி:

15. லோகாத்யக்ஷஸ் ஸுராத்யக்ஷ தர்மாத்யக்ஷ : க்ருதாக்ருத :
சதுராத்மா சதுர் வ்யூஹஸ் சதுர் தம்ஷ்ட்ரஸ் சதுர்புஜ:

16. ப்ராஜிஷ்ணுர் போஜநம் போக்தா ஸஹிஷ்ணுர் ஜகதாதிஜ:
அநகோ விஜயோ ஜேதா விஸ்வயோநி : புநர்வஸு

17. உபேந்த்ரோ வாமந: ப்ராம்சு : அமோகஸ் சுசிரூர்ஜித:
அதீந்த்ரஸ் ஸங்க்ரஹஸ் ஸர்கோ த்ருதாத்மா நியமோ யம:

18. வேத்யோ வைத்யஸ் ஸதாயோகீ வீரஹா மாதவோ மது:
அதீந்த்ரியோ மஹாமாயோ மஹோத் ஸாஹோ மஹாபல:

19. மஹாபுத்திர் மஹாவீர்யோ மஹாஸக்திர் மஹாத்யுதி:
அநிர்தேஸ்ய வபு: ஸ்ரீ மாந் அமேயாத்மா மஹா அத்ரித்ருக்

20. மஹேஷ் வாஸோ மஹீ பர்த்தா ஸ்ரீநிவாஸஸ் ஸதாம்பதி:
அநிருத்தஸ் சுரா நந்தோ கோவிந்தோ கோவிதாம் பதி:

21. மரீசிர் தமநோ ஹம்ஸஸ் ஸுபர்ணோ புஜகோத்தம:
ஹிரண்ய நாபஸ் சுதபா : பத்மநாப : ப்ரஜாபதி:

22. அம்ருத்யுஸ் ஸர்வத்ருக் ஸிம்ஹஸ் ஸந்தாதா ஸந்திமாந் ஸ்திர:
அஜோ துர்மர்ஷணஸ் ஸாஸ்தா விஸ்ருதாத்மா சுராரிஹா

23. குருர் குருதமோ தாம ஸத்யஸ் ஸத்ய பராக்ரம:
நிமிஷா அநிமிஷஸ் ஸ்ரக்வீ வாசஸ்பதி ருதாரதீ :

24. அக்ரணீர் க்ராமணீ : ஸ்ரீமாந் ந்யாயோ நேதா ஸமீரண:
ஸஹஸ்ரமூர்த்தா விஸ்வாத்மா ஸஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ரபாத்

25. ஆவர்த்தநோ நிவ்ருத் தாத்மா ஸம்வ்ருதஸ் ஸம்ப்ர மர்தந:
அஹஸ் ஸம்வர்த்தகோ வஹ்நி ரநிலோ தரணீ தர:

26. சுப்ரஸாத : ப்ரஸந்நாத்மா விஸ்வத்ருக் விஸ்வபுக் விபு:
ஸத்கர்த்தா ஸத்க்ருதஸ் ஸாதுர் ஜஹ்நுர் நாராய்ணோ நர:

27. அஸங்க்யேயோ அப்ர மேயாத்மா விஸிஷ்ட ஸ்ஸிஷ்டக்ருச் சுசி:
ஸித்தார்த்தஸ் ஸித்த ஸங்கல்பஸ் ஸித்திதஸ் ஸித்தி ஸாதந:

28. வ்ருஷாஹீ வ்ருஷபோ விஷ்ணுர் வ்ருஷபர்வா வ்ருஷாதர :
வர்த்தநோ வர்த்த மாநஸ்ச விவிக்தஸ் ஸ்ருதி ஸாகர:

29. கபுஜோ துர்த்தரோ வாக்மீ மஹேந்த்ரோ வஸுதோ வஸுநைக
ரூபோ ப்ருஹத் ரூபஸ் ஸிபிவிஷ்ட : ப்ரகாஸந:

30. ஓஜஸ் தேஜோ த்யுதிதர: ப்ரகாஸாத்மா ப்ரதாபந:
ருத்தஸ் ஸ்பஷ்டாக்ஷரோ மந்த்ரஸ் சந்த்ராம்ஸுர் பாஸ்கர த்யுதி:

31. அம்ருதாம் ஸுத்பவோ பாநு: ஸஸ பிந்துஸ் சுரேஸ்வர:
ஒளஷதம் ஜகதஸ் ஸேதுஸ் ஸத்ய தர்ம பராக்ரம:

32. பூதபவ்ய பவந்நாத : பவந : பாவநோ அநல:
காமஹா காம க்ருத் காந்த : காம : காம ப்ரத ப்ரபு :

33. யுகாதி க்ருத் யுகா வர்த்தோ நைக மாயோ மஹாஸந:
அத்ருஸ்யோ அவ்யக்த ரூபஸ்ச ஸஹஸ்ர ஜித நந்தஜித்

34. இஷ்டோவிஸிஷ்டஸ் ஸிஷ்டேஷ்ட : ஸிகண்டீ நகுஷா வ்ருஷ
க்ரோதஹா க்ரோத க்ருத் கர்த்தா விஸ்வ பாஹுர் மஹீதர:

35. அச்யுத: ப்ரதித :ப்ராண: ப்ராணதோ வாஸவாநுஜ:
அபாந்நிதி ரதிஷ்டாந மப்ரமத்த : ப்ரதிஷ்டித :

36. ஸ்கந்தஸ் ஸ்கந்ததரோ துர்யோ வரதோ வாயு வாஹந:
வாசுதேவோ ப்ருஹத் பாநு ராதிதேவ : புரந்தர:

37. அஸோகஸ் தாரணஸ் தாரஸ் ஸுரஸ் ஸெளரிர் ஜநேஸ்வர:
அநுகூலஸ் ஸதாவர்த்த : பத்மீ பத்ம நிபேக்ஷண:

38. பத்ம நாபோ அரவிந்தாக்ஷ : பத்ம கர்ப்பஸ் ஸரீரப்ருத்
மஹர்திர் ருத்தோ வ்ருத்தாத்மா மஹாக்ஷ கருட த்வஜ:

39. அதுலஸ் ஸரபோ பீமஸ் ஸமயஜ்ஞோ ஹவிர் ஹரி:
ஸர்வ லக்ஷண லக்ஷண்யோ லக்ஷ்மீவாந் ஸமிதிஞ் ஜய:

40. விக்ஷரோ ரோஹிதோ மார்கோ ஹேதுர் தாமோதரஸ் ஸஹ:
மஹீதரோ மஹாபாகோ வேகவாந் அமிதாஸந:

41. உத்பவ : க்ஷபணோ தேவஸ் ஸ்ரீகர்ப்ப : பரமேஸ்வர:
கரணம் காரணம் கர்த்தா விகர்த்தா கஹநோ குஹ:

42. வ்யவஸாயோ வ்யவஸ் தாநஸ் ஸம்ஸ்தாநஸ் ஸ்தாநதோ த்ருவ:
பரர்த்தி : பரம ஸ்பஷ்டஸ் துஷ்ட : புஷ்டஸ் சுபேக்ஷண:

43. ராமோ விராமோ விரதோ மார்கோ நேயோ நயோநய:
வீரஸ் ஸக்திமதாம் ஸ்ரேஷ்டோ தர்மோ தர்ம விதுத்தம:

44. வைகுண்ட : புருஷ ப்ராண : ப்ராணத : ப்ரணவ :ப்ருது:
ஹிரண்யகர்ப்பஸ் ஸத்ருக்நோ வ்யாப்தோ வாயுரதோக்ஷஜ:

45. ருதுஸ் சுதர்ஸந : கால : பரமேஷ்டீ பரிக்ரஹ :
உக்ரஸ் ஸம்வத்ஸரோ தக்ஷ விஸ்ராமோ விஸ்வ தக்ஷிண:

46. விஸ்தாரஸ் ஸ்தாவர ஸ்தாணு : ப்ரமாணம் பீஜமவ்யயம்
அர்த்தோ அநர்த்தோ மஹாகோஸோ மஹாபோகோ மஹாதந:

47. அநிர் விண்ணஸ் ஸ்தவிஷ்டோ பூர் தர்ம யூபோ மஹாமக:
ந க்ஷத்ர நேமிர் ந க்ஷத்ரீ க்ஷம: க்ஷமஸ் ஸமீஹந:

48. யஜ்ஞ இஜ்யோ மஹேஜ்யஸ்ச க்ரதுஸ் ஸத்ரம் ஸதாம் கதி:
ஸர்வதர்ஸீ நிவ்ருத்தாத்மா ஸர்வஜ்ஞோ ஜ்ஞாந முத்தமம்

49. சுவ்ரதஸ் சுமுகஸ் ஸூக்ஷ்மஸ் சுகோஷஸ் சுகதஸ் சுஹ்ருத் :
மநோ ஹரோ ஜித க்ரோதோ வீரபாஹுர் விதாரண:

50. ஸ்வாபந: ஸ்வவஸோ வ்யாபீ நைகாத்மா நைக கர்மக்ருத்:
வத்ஸரோ வத்ஸலோ வத்ஸீ ரத்ந கர்ப்போ தநேஸ்வர:

51. தர்மகுப் தர்மக்ருத் தர்மீ ஸதஸத் க்ஷர மக்ஷரம்
அவிஜ்ஞாதா ஸஹஸ்ராம்ஸுர் விதாதா க்ருத லக்ஷண:

52. கபஸ்தி நேமிஸ் ஸத்வஸ்தஸ் ஸிம்ஹோ பூத மஹேஸ்வர:
ஆதி தேவோ மஹாதேவோ தேவேஸோ தேவப்ருத் குரு:

53. உத்தரோ கோபதிர் கோப்தா ஞாந கம்ய : புராதந:
ஸரீரபூத ப்ருத் போக்தா கபீந்த்ரோ பூரி தக்ஷிண:

54. ஸோமபோ அம்ருதபஸ் ஸோம : புருஜித் புருஸத்தம :
விநயோ ஜயஸ் ஸத்ய ஸந்தோ தாஸார்ஹஸ் ஸாத்வதாம் பதி

55. ஜீவோ விநயிதா ஸாக்ஷீ முகுந்தோ அமித விக்ரம:
அம்போநிதிர் அநந்தாத்மா மஹோ ததிஸயோ அந்தக:

56. அஜோ மஹார்ஹ ஸ்வாபாவ்யோ ஜிதா மித்ர: ப்ரமோதந:
ஆநந்தோ நந்தநோ நந்தஸ் ஸத்ய தர்மா த்ரிவிக்ரம :

57. மஹர்ஷி : கபிலாசார்ய : க்ருதஜ்ஞோ மேதிநீ பதி:
த்ரிபதஸ் த்ரிதஸாத் யக்ஷ மஹா ஸ்ருங்க : க்ருதாந்த க்ருத்

58. மஹா வராஹோ கோவிந்தஸ் சுஷேண : கநகாங் கதீ
குஹ்யோ கபீரோ கஹநோ குப்தஸ் சக்ர கதாதர:

59. வேதாஸ்ஸ்வாங்கோ ஜித: க்ருஷ்ணோத்ருடஸ் ஸங்கர்ஷணோ அச்யுத:
வருணோ வாருணோ வ்ருக்ஷ :புஷ்கராக்ஷ மஹாமநா :

60. பகவாந் பகஹா நந்தீ வநமாலீ ஹலாயுத:
ஆதித்யோ ஜ்யோதி ராதித்யஸ் ஸ்ஹிஷ்ணுர் கதி ஸத்தம:

61. சுதந்வா கண்ட பரசுர் தாருணோ த்ரவிண ப்ரத:
திவஸ்ப்ருக் க்ருச்சமஸ் வ்யாஸோ வாசஸ்பதி ரயோநிஜ:

62. த்ரிஸாமா ஸாமகஸ் ஸாம நிர்வாணம் பேஷஜம் பிஷக்:
ஸந்யாஸ க்ருச்சமஸ் ஸாந்தோ நிஷ்டா ஸாந்தி : பராயணம்

63. சுபாங்கஸ் ஸாந்திதஸ் ஸ்ரஷ்டா குமுத : குவலேஸய :
கோஹிதோ கோபதிர் கோப்தா வ்ருஷபாக்ஷ வ்ருஷ ப்ரிய:

64. அநிவர்த்தீ நிவ்ருத் தாத்மா ஸம்க்ஷப்தா க்ஷம க்ருச்சிவ:
ஸ்ரீ வத்ஸ வக்ஷஸ் ஸ்ரீவாஸ : ஸ்ரீபதிஸ் ஸ்ரீமதாம்வர:

65. ஸ்ரீதஸ் ஸ்ரீஸஸ் ஸ்ரீநிவாஸஸ் ஸ்ரீ நிதிஸ் ஸ்ரீவிபாவந:
ஸ்ரீதரஸ் ஸ்ரீகரஸ் ஸ்ரேயஸ் ஸ்ரீமாந் லோக த்ரயாஸ்ரய:

66. ஸ்வக்ஷஸ் ஸ்வங்கஸ் ஸதாநந்தோ நந்திர் ஜ்யோதிர் கணேஸ்வர:
விஜிதாத்மா விதேயாத்மா ஸத்கீர்த்திஸ் சிந்ந ஸம்ஸய:

67. உதீர்ணஸ் ஸர்வதஸ் சக்ஷúர் அநீஸஸ் ஸாஸ்வத ஸ்திர:
பூஷயோ பூஷணோ பூதி ரசோகஸ் சோகநாஸந :

68. அர்ச்சிஷ்மா நர்ச்சித : கும்போ விசுத்தாத்மா விஸோதந:
அநிருத்தோ அப்ரதிரத : ப்ரத்யும்நோ அமித விக்ரம :

69. கால நேமிநிஹா வீர ஸெளரிஸ் ஸுர ஜநேஸ்வர:
த்ரிலோகாத்மா த்ரிலோகேஸ : கேஸவ : கேஸிஹா ஹரி:

70. காமதேவ : காமபால : காமீ காந்த: க்ருதாகம :
அநிர் தேஸ்ய வபுர் விஷ்ணுர் வீரோ அநந்தோ தநஞ்ஜய :

71. ப்ரஹ்மண்யோ ப்ரஹ்மக்ருத் ப்ரஹ்மா ப்ரஹ்ம ப்ரஹ்ம விவர்த்தந :
பரஹ்மவித் ப்ராஹ்மணோ ப்ரஹ்மீ ப்ரஹ்மஞோ ப்ராஹ்மண ப்ரிய:

72. மஹா க்ரமோ மஹா கர்மா மஹா தேஜா மஹோரக:
மஹா க்ரதுர் மஹா யஜ்வா மஹா யஜ்ஞோ மஹா ஹவி:

73. ஸ்தவ்யஸ் ஸ்தவப்ரியஸ் ஸ்தோத்ரம் ஸ்துதிஸ் ஸ்தோதா ரணப்ரிய:
பூர்ண: பூரயிதா புண்ய: புண்ய கீர்த்தி ரநாமய:

74. மநோ ஜவஸ் தீர்த்த கரோ வசு ரேதா வசு ப்ரத:
வசுப்ரதோ வாஸுதேவோ வஸுர் வசுமநாஹவி:

75. ஸத்கதிஸ் ஸத் க்ருதிஸ் ஸத்தா ஸத் பூதிஸ் ஸத் பராயண:
ஸூர ஸேநோ யது ஸ்ரேஷ்டஸ் ஸந்நிவாஸஸ் கயாமுந :

76. பூதா வாஸோ வாசுதேவஸ் ஸர்வாசு நிலயோ அநல :
தர்ப்பஹா தர்ப்பதோ அத்ருப்தோ துர்தரோ அதா அபராஜித:

77. விஸ்வ மூர்த்திர் மஹா மூர்த்திர் தீப்த மூர்த்திர் அமூர்த்திமாந்
அநேக மூர்த்தி ரவ்யக்தஸ் ஸத மூர்த்திஸ் ஸதாநந:

78. ஏகோ நைகஸ் ஸவ : க : கிம் யத்தத் பத மநுத்தமம்
லோக பந்துர் லோக நாதோ மாதவோ பக்த வத்ஸல:

79. ஸுவர்ண வர்ணோ ஹேமாங்கோ வராங்கஸ் சந்தநாங் கதீ
வீரஹா விஷமஸ் ஸுந்யோ த்ருதாஸீரஸ் சலஸ்சல:

80. அமாநீ மாநதோ மாந்யோ லோகஸ்வாமீ த்ரிலோக த்ருத்
சுமேதா மேதஜோ தந்யஸ் ஸத்ய மேதா தராதர:

81. தேஜோ வ்ருஷா த்யுதி தரஸ் ஸர்வ ஸஸ்த்ர ப்ருதாம் வர:
ப்ரக்ரஹோ நிக்ரஹோ வ்யக்ரோ நைக ஸ்ருங்கோ கதாக்ரஜ

82. சதுர் மூர்த்திஸ் சதுர் பாஹுஸ் சதுர் வ்யூஹஸ் சதுர் கதி:
சதுராத்மா சதுர் பாவஸ் சதுர் வேத விதேகபாத்

83. ஸமா வர்த்தோ நிவ்ருத் தாத்மா துர்ஜயோ துரதி க்ரம:
துர்லபோ துர்கமோ துர்கோ துரா வாஸோ துராரிஹா

84. சுபாங்கோ லோக ஸாரங்க: சுதந்துஸ் தந்து வாத்தந:
இந்த்ர கர்மா மஹா கர்மா க்ருத கர்மா க்ருதாகம:

85. உத்பவஸ் சுந்தரஸ் சுந்தோ ரத்ந நாபஸ் சுலோசந:
அர்க்கோ வாஜஸநஸ் ஸ்ருங்கீ ஜயந்தஸ் ஸர்வ விஜ்ஜயீ

86. சுவர்ண பிந்து ரக்ஷப்யஸ் ஸர்வ வாகீஸ் வரேஸ்வர:
மஹா ஹ்ரதோ மஹா கர்த்தோ மஹா பூதோ மஹாநிதி:

87. குமுத : குந்தர : குந்த : பர்ஜந்ய : பாவநோ நில :
அம்ருதாஸோ அம்ருத வபுஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வதோ முக :

88. கலபஸ் சுவ்ரதஸ் ஸித்தஸ் ஸத்ருஜிச் சத்ரு தாபந:
ந்யக்ரோதோ தும்பரோ அஸ்வத்தஸ் சாணூராந்த்ர நிஷூதந:

89. ஸஹஸ்ரார்ச்சிஸ் ஸப்த ஜிஹ்வஸ் ஸப்தைதாஸ் ஸப்த வாஹந:
அமூர்த்தி ரநகோ அசிந்த்யோ : ப்ராக்வம்ஸோ வம்ஸவர்த்தந:

90. அணுர்ப்ருஹத் க்ருஸஸ் ஸ்தூலோ குணப்ருந்நிர் குணோ மஹாந்
அத்ருதஸ் ஸ்வத்ருதஸ் ஸ்வாஸ்ய: ப்ராக்வம்ஸோ வம்ஸவர்த்தந:

91. பாரப்ருத் கதிதோ யோகீ யோகீஸஸ் ஸர்வ காமத:
ஆஸ்ரமஸ் ஸ்ரமண: க்ஷமஸ் சுபர்ணோ வாயு வாஹந:

92. தநுர்த் தரோ தநுர் வேதோ தண்டோ தமயிதா அதம:
அபராஜிதஸ் ஸர்வ ஸஹோ நியந்தா நியமோயம:

93. ஸத்வவாந் ஸாத்விகஸ் ஸத்யஸ் ஸத்ய தர்ம பராயண:
அபிப்ராய : ப்ரியார்ஹோஹ ப்ரியக்ருத் ப்ரீதி வர்த்தந:

94. விஹாய ஸகதிர் ஜ்யோதிஸ் சுருசிர் ஹுதபுக் விபு:
ரவிர் விரோசநஸ் ஸூர்யஸ் ஸவிதா ரவி லோசந:

95. அநந்தோ ஹுதபுக் போக்தா சுகதோ நைகதோ அக்ரஜ:
அநிர் விண்ணஸ் ஸதா மர்ஷீ லோகாதிஷ்டாந மத்புத:

96. ஸநாத் ஸநாதந தம: கபில : கபிரவ்யய :
ஸ்வஸ்திதஸ் ஸ்வஸ்திக்ருத் ஸ்வஸ்தி ஸ்வஸ்திபுக் ஸ்வஸ்தி தக்ஷிண:

97. அரௌத்ர : குண்டலீ சக்ரீ விக்ரம் யூர்ஜித ஸாஸந:
ஸப்தாதிகஸ் ஸப்த ஸஹ : ஸிஸிரஸ் ஸர்வரீ கர:

98. அக்ரூர: பேஸலோ தக்ஷ தக்ஷிண க்ஷமிணாம் வர:
வித்வத்தமோ வீதபய: புண்ய ஸ்வரண கீர்த்தந:

99. உத்தாரணோ துஷ் க்ருதிஹா புண்யோ துஸ்வப்ந நாஸந:
வீரஹா ரக்ஷணஸ் ஸந்தோ ஜீவந: பர்ய வஸ்தித:

100. அநந்த ருபோ அநந்தஸ்ரீ: ஜிதமந்யுர் பயாபஹ:
சதுரஸ்ரோ கபீராத்மா விதிஸோ வ்யாதிஸோ திஸ:

101. அநாதிர் பூர்புவோ லக்ஷ்மீஸ் சுவீரோ ருசிராங்கத:
ஜநநோ ஜந ஜந்மாதிர் பீமோ பீம பராக்ரம:

102. ஆதார நிலயோ தாதா புஷ்ப ஹாஸ: ப்ரஜாகர:
ஊர்த்வகஸ் ஸத்பதாசார: ப்ராணத: ப்ரணவ: பண:

103. ப்ரமாணம் ப்ராண நிலய: ப்ராண த்ருத் ப்ராண ஜீவந:
தத்வம் தத்வ விதேகாத்மா ஜந்ம ம்ருத்யு ஜராதிக:

104. பூர்புவ: ஸ்வஸ்த ருஸ்தாரஸ் ஸவிதா ப்ரபிதா மஹ:
யஜ்ஞோ யஜ்ஞபதிர் யஜ்வா யஜ்ஞாங்கோ யஞ்ஞ வாஹந:

105. யஜ்ஞ ப்ருத் யஜ்ஞ க்ருத் யஜ்ஞி யஜ்ஞ புக் யஜ்ஞ ஸாத ந:
யஜ்ஞாந்த க்ருத் யஜ்ஞ குஹ்யம் அந்ந மந்நாத ஏவ ச

106. ஆத்ம யோநிஸ் ஸ்வயஞ் ஜாதோ வைகாநஸ் ஸாம காயந:
தேவகீ நந்தநஸ் ஸ்ரஷ்டா க்ஷிதீஸ: பாப நாஸந:

107. ஸங்கப்ருந் நந்தகீ சக்ரீ ஸார்ங்க தந்வா கதாதர:
ரதாங்க பாணி ரக்ஷப்யஸ் ஸர்வ ப்ரஹரணாயுத:
ஸ்ரீ ஸர்வ ப்ரஹரணாயுத ஓம் நம இதி

(வநமாலீ கதீ ஸார்ங்கீ ஸங்கீ சக்ரீ ச நந்தகீ
ஸ்ரீமாந் நாரயணோ விஷ்ணுர் வாசுதேவோ அபிரக்ஷது)

பலஸ்ருதி 

இதீதம் கீர்த்த நீயஸ்ய கேஸவஸ்ய மஹாத்மந:
நாம் நாம் ஸஹஸ்ரம் திவ்யாநாம் அஸேஷேண ப்ரகீர்த்திதம்

ய இதம் ஸ்ருணுயாந் நித்யம் யஸ்சாபி பரி கீர்த்தயேத்
நாசுபம் ப்ராப்நுயாத் கிஞ்சித் ஸோஅமுத்ரேஹ ச மாநவ:

வேதாந்தகோ ப்ராஹ்மணஸ் ஸ்யாத் க்ஷத்ரியோ விஜயீ பவேத்
வைஸ்யோ தநஸம்ருத்தஸ் ஸ்யாத் ஸுத்ரஸ் சுக மவாப்நுயாத்

தர்மார்த்தீ ப்ராப்நுயாத் தர்மம் அர்த்தார்த்தீ சார்த்த மாப்நுயாத்
காமா நவாப் நுயாத் காமீ ப்ரஜார்தீ ப்ராப்நுயாத் ப்ரஜா:

பக்திமாந் யஸ் ஸதோத்தாய சுசிஸ் தத்கத மாநஸ:
ஸஹஸ்ரம் வாசுதேவஸ்ய நாம்நா மேதத் ப்ரகீர்த்தயேத்

யஸ: ப்ராப்நோதி விபுலம் யாதி ப்ராதாந்ய மேவ ச
அசலாம் ஸ்ரிய மாப்நோதி ஸ்ரேய: ப்ராப்நோத் யநுத்தமம்

ந பயம் க்வசி தாப்நோதி வீர்யம் தேஜஸ்ச விந்ததி
பவத்ய ரோகோ த்யுதிமாந் பலரூப குணாந்வித:

ரோகார்த்தோ முச்யதே ரோகாத் பத்தோ முச்யேத பந்தநாத்
பயாந் முச்யேத பீதஸ்து முச்யே தாபந்ந ஆபத:

துர்காண் யதிதரத்யாசு புருஷ : புருஷாத்தமம்
ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண நித்யம் பக்தி ஸமந்வித:

வாஸுதேவா ஸ்ரயோ மர்த்யோ வாஸுதேவ பராயண:
ஸர்வ பாப விசுத் தாத்மா யாதி ப்ரஹ்ம ஸநாதநம்:

ந வாஸுதேவ பக்தாநாம் அசுபம் வித்யதே க்வசித்
ஜந்ம ம்ருத்யு ஜரா வ்யாதி பயம் நைவோப ஜாயதே

இமம் ஸ்தவ மதீயாந: ஸ்ரத்தா பக்தி ஸமந்வித:
யுஜ்யே தாத்ம ஸுகக்ஷந்தி ஸ்ரீ த்ருதி ஸ்ம்ருதி கீர்த்திபி:

ந க்ரோதோ ந ச மாத்ஸர்யம் ந லோபோ நாசுபா மதி:
பவந்தி க்ருத புண்யாநாம் பக்தாநாம் புருஷாத்தமே

த்யௌஸ் ஸசந்த்ரார்க்க நக்ஷத்ரா கம் திஸோ பூர் மஹோததி
வாஸுதேவஸ்ய வீர்யேண வித்ருதாநி மஹாத்மந:

ஸசுராசு ரகந்தர்வம் ஸயக்ஷரக ராக்ஷஸம்
ஜகத் வஸே வர்த்ததேதம் க்ருஷ்ணஸ்ய ஸசராசரம்

இந்த்ரியாணி மநோ புத்திஸ் ஸத்வம் தேஜோ பலம் த்ருதி:
வாஸுதேவாத் மகாந்யாஹு : க்ஷத்ரம் க்ஷத்ரஜ்ஞ ஏவ ச

ஸர்வா கமாநாமாசார : ப்ரதமம் பரிகல்பதே :
ஆசார ப்ரதமோ தர்மோ தர்மஸ்ய ப்ரபுரச்யுத :

ரிஷய : பிதரோ தேவா மஹா பூதாநி தாதவ :
ஜங்கமா ஜங்கமஞ் சேதம் ஜகந் நாராயணோத்பவம்

யோகோ ஞாநம் ததா ஸாங்க்யம் வித்யாஸ் ஸில்பாதிகர்ம ச
வேதாஸ் ஸாஸ்த்ராணி விஞ்ஞாநம் ஏதத் ஸர்வம் ஜநார்தநாத்

ஏகோ விஷணுர் மஹத்பூதம் ப்ருதக் பூதாந் யநேகஸ:
த்ரீந் லோகாந் வ்யாப்ய பூதாத்மா புங்க்தே விஸ்வ புகவ்யய:

இமம் ஸ்தவம் பகவதோ விஷ்ணோர் வ்யாஸேந கீர்த்திதம்
படேத்ய இச்சேத் புருஷ : ஸ்ரேய : ப்ராப்தும் சுகாநி ச

விஸ்வேஸ்வர மஜம் தேவம் ஜகத : ப்ரபுமவ்யயம்
பஜந்தி யே புஷ்கராக்ஷம் ந தே யாந்தி பராபவம்


ந தே யாந்தி பராபவம் ஓம் நம இதி

அர்ஜுந உவாச -

பத்மபத்ர விஸாலாக்ஷ பத்மநாப ஸுரோத்தம
பக்தாநா மநுரக்தாநாம் த்ராதா பவ ஜநார்தந

ஸ்ரீ பகவாநுவாச -

யோ மாம் நாம ஸஹஸ்ரேண ஸ்தோது மிச்சதி பாண்டவ
ஸோஹ மேகேந ஸ்லோகேந ஸ்துத ஏவ ந ஸம்ஸய:
ஸ்துத ஏவ ந ஸம்ஸய ஓம் நம இதி

வ்யாஸ உவாச - 

வாஸாநாத் வாஸுதேவஸ்ய வாஸிதம் புவனத்ரயம்
ஸர்வபூத நிவாஸோ அஸி வாஸுதேவ நமோஸது தே
ஸ்ரீ வாஸுதேவ நாமேஅஸ்து த ஓம் நம இதி

பார்வத்யுவாச -

கேநோ பாயேந லகுநா விஷ்ணோர் நாம ஸஹஸ்ரகம்
பட்யதே பண்டிதைர் நித்யம் ஸ்ரோது மிச்சாம் யஹம் ப்ரபோ


ஈஸ்வர உவாச - 

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வராநநே
ஸ்ரீ ராமநாம வராநந ஓம் நம இதி

ப்ரஹ்மோவாச - 

நமோஸ்த் வநந்தாய ஸஹஸ்ர மூர்த்தயே
ஸஹஸ்ர பாதா க்ஷிஸிரோரு பாஹவே
ஸஹஸ்ர நாம்நே புருஷாய ஸாஸ்வதே
ஸஹஸ்ர கோடி யுகதாரிணே நம:
ஸ்ரீ ஸஹஸ்ரகோடி யுகதாரிண ஓம் நம இதி

ஸஞ்ஜய உவாச -

யத்ர யோகேஸ்வர : க்ருஷ்ணோ யத்ர பார்த்தோ தநுர்தர:
தத்ர ஸ்ரீர் விஜயோ பூதி : த்ருவா நீதிர் மதிர் மம

ஸ்ரீ பகவாந் உவாச -

அநந்யாஸ் சிந்தயந்தோ மாம் யே ஜநா : பர்யு பாஸதே
தேஷாம் நித்யாபி யுக்தாநாம் யோக க்ஷமம் வஹாம் பஹம்
பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய சதுஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே

ஆர்த்தா விஷண்ணாஸ் ஸிதிலாஸ்ச பீதா :
கோரேஷுச வ்யாதிஷு வர்த்தமாநா :
ஸங்கீர்த்ய நாராயண ஸப்த மாத்ரம்
விமுக்த துக்காஸ் சுகிநோ பவந்து

காயேனவாசாமனஸேந்த்ரியைர்வா புத்யாத்மனாவா ப்ரக்ருதே ஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை ஸ்ரீமந்நாராயணாயேதி சமர்ப்பயாமி.