திருவாதிரைத் திரு நாள் என்றாலே சிதம்பரத்தை எண்ணாமல் இருக்க முடியுமா ?
ஐந்து சபைகளில் முதன்மையானதாகவும், ஆடல்வல்லானின் அழகு நடனத்தை பதஞ்சலிக்கும் வியாக்கிர பாதருக்கும் காணக் கிடைக்கும்படி செய்த பெருமை உடையதுமான பொன்னம்பலத்தினை எண்ணினாலே எல்லாப் பாவங்களும் தீர்ந்து போகுமே !
பாபம் தீரும் என்றதும் நினைவுக்கு வருவது நடராஜப் பெருமானின் மேல் பாடப்பட்ட இடைக்காலப் பாடல்கள்.
அதிலும் நிந்தாஸ்துதி என்னும் வகையில் சிவபெருமானின் லீலைகளையும், பெருமைகளையும் விளக்கி அதே சமயத்தில் அதை எல்லாம் பாடலில் கூறுகையில் உயர்த்திப் பேசாமல் மட்டம் செய்து கூறுவது போல எழுதும் வகையில் உருவாக்கப்பட்ட பாடல்கள் நினைவுக்கு வருகின்றன.
இவற்றில் நாட்டியம் ஆடுபவர்களும், ரசிகர்களும் நன்கு அறிந்த பாடலான "நடமாடித் திரிந்த" என்ற காம்போஜி ராகப் பாடல் இனிமையானதும் பிரசித்தமானதும் கூட..
சமீபத்தில் இதன் முழுவடிவமும் வ்லைத்தளத்தில் கிடைக்கப் பெற்றேன். அதை அனைவரும் அறிந்து மகிழ வேண்டும் என்ற எண்ணத்துடன் இங்கு தருகின்றேன்.
பல்லவி
நடமாடித் திரிந்த உமக்கு இடதுகால் உதவாமல்
முடமானதேன் என்று சொல்லுவீரய்யா!
அனுபல்லவி
திடமேவும் தில்லைநகர் மருவு பேரானந்த
சடைவிரித்தாடினவா தேவ சிற்சபை அறிய
(நடமாடித்..)
சரணங்கள்
1.
திருநீறைச் சுமந்தீரோ! நெருப்பான மேனிதனில்
சீதத்தினால் மிகுந்த வாதகுணமோ!
ஒருமையுடன் மார்கண்டர்க்கு உதவியாய் மரலி விழ
உதைக்க சுளிக்கேறியுண்ட குணமோ!
பரவைதன் தெருவாசற்படி இடறிற்றோ, எந்தன்
பாவமோ, என் சிவனே, மூவர்க்கும் முதல்வன் என்று
(நடமாடித்..)
2.
தனஞ்செய மஹிபனுடன் சமரில் அடிபட்டு விழ
சந்திலே முடி பிசகி நொந்ததுவோ?
இனம் புரியும் தாருகா வனமெங்கும் திரிந்ததில்
முள்ளேறுண்டதோ சொல்லும்? -- முறிந்ததுவோ?
கனகசபை தனில் நடனம் கண்டோர்கள் அதிசயிக்க
கண்ணெண்றுண்டதோ சொல்லும்?
விண்ணவர்க்கும் முதல்வன் என்று
(நடமாடித்..)
3.
பக்தி செய்யும் பெரியோர்கள் பாபநாசமாகும்
பரமபதம் இதுவென்று தூக்கி நின்றதுவோ?
சக்தி சிவகாமவல்லி தன்பாதம் நோகுமென்றே
தரையில் அடிவைக்க தயங்கி நின்றதுவோ?
சத்யலோக அதிபதி தாளத்திற்கேற்ப நடம்
தாங்கியே ஒரு காலைத் தூக்கி நின்றதுவோ?
(நடமாடித்..)
No comments:
Post a Comment