Friday, January 4, 2013


முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்!

செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு

வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்!

செப்பென்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்

நப்பின்னை நங்காய் திருவே துயிலேழாய்!

உக்கமுந் தட்டொளியும் தந்துன் மணாளனை

இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்!

No comments: