Thursday, January 3, 2013

குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி

கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல்

வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்

மைத்தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை

எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்

எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்

தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்!

No comments: