Wednesday, January 2, 2013

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்

நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்!

கந்தங் கமழும் குழலீ! கடை திறவாய்!

வந்தெங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்

பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்

பந்தார் விரலியுன் மைத்துனன் பேர்பாடச்

செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப

வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!

No comments: