Tuesday, October 25, 2011

பக்த மீரா படத்தில் திருமதி எம்.எஸ், அம்மா அவர்கள் பாடிய இந்தப் பாடல் அனேகமாக எந்த இசைத் தட்டுகளிலும் இடம் பெறவில்லை. இந்தப் பாடல் காட்சியில்தான் திரு எம்.ஜி.ஆர் அவர்களும் இடம் பெற்றிருக்கிறார் என்பது இன்னொரு சேதி.

பக்தியில் கனிந்து உருக இது ஒரு வாய்ப்பு. அதை நழுவவிடலாமா ?

http://music2.cooltoad.com/music/song.php?id=532520

சராசரம் உன்னை யாவும் தேடுமே...
மறைகளும் மகிழ்ந்து உன்னைப் பாடுமே....ஹே ப்ரபோ !
நிராசையால் நைந்த என் நெஞ்சமும்
பராவும் உன் பாதாரவிந்தமே !

உன்னையே எனதுயிர் துணை என்று
உவந்ததென் தவறோ ஐயா !
கனவிலும் உன்னை அன்றி நினைவுண்டோ
கதி உன் கழலின் நிழலே அன்றோ !
வானகம் வையகம் தரும் இன்பங்களைக்
கருதியதும் உண்டா?
இரங்குவதறிந்திலையா ? மறந்திடலாகாதையா !

இரவெலாம் கண்ணில் நீர் அருவி பெருகும் !
அனலில் மெழுகென அகமும் உருகும் !
"ஹரி ஹரீ" என நாவும் கதறும் !
இதயமும் பதறும் ஐயா !

பாத மலரில் படிந்திடும் வண்டாய்
நாதனே உன் இசை பாடுவேன் கண்டாய் !
அடியாள் மீரா அன்றும் இன்றும் உன்
அடைக்கலம் ஐயா !

No comments: