பாடியவர் : பித்துக்குளி முருகதாஸ்
ஆசை வேண்டும்.. ஆசை வேண்டும்
பாட வேண்டும் என்ற ஆசை வேண்டும்
பக்க மேளதாளம் ஒன்றும் வராவிட்டாலும்
( பாட வேண்டும் )
ஆடலினால் இந்த அவனியெல்லாம் ஈன்ற
ஆண்டவனை நினைந்து அழுது தொழுதுருகி
( பாட வேண்டும் )
மூட மூட ரோகம் பாடப் பாட ராகம்
முயற்சி செய்தால் இங்கு முற்றுப் பெறாததில்லை
கூட வேண்டும் அன்பர் கூட்டத்து மத்தியிலே
குமரி கன்யாகுமரி அம்மா சரணம் என
( பாட வேண்டும் )
No comments:
Post a Comment