Monday, October 10, 2011

பாட வேண்டும்

பாடியவர் : பித்துக்குளி முருகதாஸ்

ஆசை வேண்டும்.. ஆசை வேண்டும்

பாட வேண்டும் என்ற ஆசை வேண்டும்
பக்க மேளதாளம் ஒன்றும் வராவிட்டாலும்

( பாட வேண்டும் )

ஆடலினால் இந்த அவனியெல்லாம் ஈன்ற
ஆண்டவனை நினைந்து அழுது தொழுதுருகி

( பாட வேண்டும் )

மூட மூட ரோகம் பாடப் பாட ராகம்
முயற்சி செய்தால் இங்கு முற்றுப் பெறாததில்லை
கூட வேண்டும் அன்பர் கூட்டத்து மத்தியிலே
குமரி கன்யாகுமரி அம்மா சரணம் என

( பாட வேண்டும் )

No comments: